களவுபோன 3 லட்சம் ரூபாயை 'பேடிஎம்' வழங்க உத்தரவு

களவுபோன 3 லட்சம் ரூபாயை 'பேடிஎம்' வழங்க உத்தரவு

1 mins read

சென்னை: திருச்­சி­யைச் சேர்ந்த மருத்­துவ மாண­வி ­பவித்ராவின் 'பேடி­எம்' கணக்கில் இருந்து ரூ.3 லட்­சம் திரு­ட்டு போனதை அடுத்து, திரு­டுபோன பணத்தை மாணவியிடம் வழங்க 'பேடி­எம்' நிறு­வ­னத்­துக்கு உத்­த­ர­வி­டும்­படி ரிசர்வ் வங்­கிக்கு சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதுகுறித்து பவித்ரா தொடர்ந்த வழக்கு நீதி­பதி மஞ்­சுளா முன் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது, வங்கியின் தரப்­பில், 'மாண­வி­யின் பணம் வங்கிக் கணக்­கில் இருந்து காணா­மல் போக­வில்லை. 'பேடி­எம்' கணக்­கி­லி­ருந்து காணா­மல் போயி­ருப்ப தால் இதற்கு வங்கி பொறுப்­பேற்க முடி­யாது' என வாதி­ட்டது.

பேடி­எம் தரப்­பில், 'தங்­கள் நிறு­வ­னத்­தில் பணப் பரி­வா்­த்­தனை செய்­வது மிக­வும் பாது­காப்­பா­னது. வாடிக்­கை­யா­ள­ருக்­குத் தெரி­யா­மல் பணப் பரி­வா்­த்­தனை நடை­பெ­றாது' என்றது.

ரிசா்வ் வங்கி தரப்­பில், 'பேடி­எம், வாடிக்­கை­யா­ளா்­க­ளுக்கு இடை­யி­லான பரி­வா்­த்­த­னை­களில் தலை­யி­டு­வ­தில்லை' என விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

அனைத்­துத் தரப்பு வாதங்­க­ளை­யும் கேட்ட நீதி­பதி, "எந்­தத் தவ­றும் செய்­யாத நிலை­யில் மாணவி பணத்தைப் பறி­கொ­டுத்­துள்ளாா். வங்கி நிா்வாக­மும் 'பேடி­எம்' நிறு­வ­ன­மும் மாறி மாறி பழிபோடு­வதை ஏற்கமுடியாது. இரு வாரங்­களில் மாண­வி­யின் பணத்தைத் திரும்ப அளிக்க 'பேடி­எம்' நிறு­வ­னத்­துக்கு ரிசா்வ் வங்கி உத்­த­ர­விட வேண்­டும்," என்று உத்­த­ர­விட்­டுள்ளாா்.