சென்னை: 'மகிழ்ச்சி வீதி' (ஹேப்பி ஸ்திரீட்) என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சி சென்னை மக்களை உற்சாகப்படுத்தியது.
சென்னை மாநகராட்சியும் தனியார் அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி ஆடல், பாடல் ஏற்பாடுகளுடன் களைகட்டியது.
'மகிழ்ச்சி வீதி' நிகழ்வின்போது சென்னை அண்ணாசாலையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும். எப்போதும் பரபரப்பாகக் காட்சி அளிக்கும் அந்தச் சாலையில் பொதுமக்கள் விருப்பம்போல் நடமாடி மகிழலாம் என்பதுடன் ஆடல், பாடல் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம்.
கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை 'மகிழ்ச்சி வீதி' நிகழ்வு நடைபெற்று வந்தது.
எதிர்வரும் 21ஆம் தேதியும் இந்த நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றாடப் பரபரப்பில் இருந்து விலகி நின்று உற்சாகமாக பொழுதைக் கழிக்க இந்நிகழ்வு உதவுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

