போதையில் பனைமர உச்சியில் தூங்கினார்; மீட்க படாதபாடு

1 mins read
478969b3-49b2-4e41-86ad-ddb2c419278a
-

கோயம்­புத்­தூர்: பொள்­ளாச்சி அருகே குடி­போ­தை­யில் 100 அடி உயர பனை­மர உச்­சி­யில் தூங்­கிய குடி­கா­ர­ப் பேர்­வழி ஒரு­வரை பத்­தி­ர­மா­கக் கீழே இறக்க காவல்­து­றை­யி­ன­ரும் தீய­ணைப்புத் துறை­யினரும் படா­த­பாடுபட்­ட­னர்.

ஆனை­மலை அருகே உள்ள செம்­ப­னாம்­பட்டி என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த கே. லட்­சு­ம­ணன், 42, என்­ப­வர் தென்னை, பனை மரங்­களில் ஏறி காய்­க­ளைப் பறிப்­ப­வர். அவர், ஜமீன் கோட்­டாம்­பட்டி என்ற ஊரில் ஞாயிற்­றுக்­கி­ழமை நண்­ப­கல் நேரத்­தில் முழு குடி­போ­தை­யில் பனை­மர உச்­சி­யில் ஏறி மட்­டை­க­ளுக்கு நடுவே வச­தி­யாக தூங்­கி­விட்டார்.

கொஞ்­சம் போதை தெளிந்­த­தும் விழித்­துக்­கொண்ட லட்­சு­மணன், பயந்­து­போய் அல­றி­னார். அப்­போது அந்த வழியே வந்­த­வர்­கள் காவல்­து­றைக்குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

காவ­லர்­கள் வந்து லட்­சு­மணனை மீட்க மேற்­கொண்ட முயற்­சி­கள் பல­ன­ளிக்­க­வில்லை. பிறகு தீய­ணைப்புத் துறைக்குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

உயரே நீண்டு செல்­லும் கூண்­டு­டன் கூடிய தீய­ணைப்பு வாக­னம் வர­வ­ழைக்­கப்­பட்டு ஒரு வழி­யாக லட்­சு­ம­ணன் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார் என்று காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.