சிலை சேகரிப்பாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை: 14 கலைப் பொருள்கள் பறிமுதல்

சிலை சேகரிப்பாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை: 14 கலைப் பொருள்கள் பறிமுதல்

2 mins read
a6b359e1-0f06-4573-a9ab-163027efd050
-

சென்னை: தமிழ்­நாட்­டின் சிலைத்­ தடுப்பு உளவு காவல்­துறை அதி­கா­ரி­கள் மூன்­றா­வது முறையாக சோதனை நடத்­தி­னர்.

சென்னை ராஜா அண்­ணா­மலை­பு­ரத்­தில் உள்ள சோஃபா துரை­ரா­ஜன் என்ற சிலை சேக­ரிப்­பா­ளர் வீட்­டில் இருந்து 14 கலை­யம்ச பொருள்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர்.

அந்த வீட்­டில் பூட்­டப்­பட்­டி­ருந்த ஓர் அறை­யில் இருந்து அந்­தப் பொருள்­கள் மீட்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. நான்கு உலோ­கச் சிலை­கள், ஆறு தஞ்­சா­வூர் ஓவி­யங்­கள், மரத்­தால் ஆன நான்கு கலைப்­பொ­ருள்­கள் ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

சோஃபா துரை­ரா­ஜன் வெளி­நாட்­டில் வசிப்­ப­தாக தக­வல் வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி காவல்­துறை தெரி­வித்­தது.

அரிய வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க சிலை­க­ளைக் கடத்தி பிடி­பட்ட தீன­த­யா­ளன் என்­ப­வர் அதி­கா­ரி­களி­டம் தெரி­வித்த தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் அந்­தச் சோதனை இடம்­பெற்­றது.

சோஃபா துரை­ரா­ஜன் வீட்­டில் டிசம்­ப­ரில் முதன்­மு­த­லாக நடந்­த சோதனையில் ஆறு சிலை­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

தீன­த­யா­ள­னி­டம் இருந்து சோஃபா துரை­ரா­ஜன் மேலும் அரிய புரா­தனச் சிலை­களை வாங்கி இருக்­க­லாம் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கிக்­கி­றார்­கள்.

கடந்த ஏப்­ர­லில் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யில் மேலும் 55 சிலை­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

வீட்­டின் சாவியை ஒப்­ப­டைக்­கும்­படி அதி­கா­ரி­கள் சோஃபா துரை­ரா­ஜ­னைக் கேட்­டி­ருந்­த­னர்.

சாவி அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­படைக்­கப்­பட்­டது. அதனை­அடுத்து ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்­தப்­பட்­டது.

தீன­த­யா­ளன் இப்­போது உயி­ரோடு இல்லை. அவர் ஆழ்­வார்­பேட்­டை­யில் அபர்ணா கலைக்­கூ­டம் என்ற பெய­ரில் ஒரு கலைக்­கூ­டம் நடத்தி வந்­தார். அந்­தக் கலைக்­கூ­டத்­தில் இருந்து சோஃபா துரை­ரா­ஜன் பல பொருள்­களை வாங்கி இருப்ப தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.