அருகருகே மாவட்ட ஆட்சித்தலைவர்களாக கணவன், மனைவி

அருகருகே மாவட்ட ஆட்சித்தலைவர்களாக கணவன், மனைவி

1 mins read
cc97aed0-0f66-41c5-967d-b083be52b44a
-

சென்னை: தமிழ்­நாட்­டின் 16 மாவட்­டங்­க­ளுக்கு புதிய ஆட்­சித் தலை­வர்­களை அரசு நிய­மித்து உள்­ளது. அவர்­களில் ராம­நா­த­பு­ரம் மாவட்ட ஆட்­சி­ய­ராக விஷ்­ணு­சந்­தி­ர­னும் சிவ­கங்கை மாவட்ட ஆட்­சி­ய­ராக ஆஷா அஜித்­தும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் இரு­வ­ரும் கண­வன்-மனைவி. இரு­வ­ரும் கேரள மாநி­லம் திரு­வ­னந்­த­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

இவர்­க­ளுக்கு மூன்று வய­தில் பத்மா என்ற பெண் குழந்தை உள்­ளது. குழந்­தை­யு­டன் இருக்­கும் தம்­பதி என்­ப­தால் பக்­கத்து பக்­கத்து மாவட்­டங்­களில் பணி­யாற்­றும் வகை­யில் இவர்­களை அரசு நிய­மித்­துள்­ளது. இந்த நிய­ம­னம் குறித்து ஆஷா அஜித் கூறு­கை­யில், "நாங்­கள் இரு­வ­ருமே முதல்­மு­றை­யாக கலெக்­டர் பொறுப்­புக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளோம். இது மிகுந்த மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தோடு எங்­கள் பொறுப்­பை­யும் அதி­க­மாக்கி இருக்­கிறது.

"எங்­க­ளைப் போன்று பல தம்­ப­தி­கள் உயர் அதி­கா­ரி­க­ளாகப் பணி­பு­ரி­கி­றார்­கள். குடும்­பம் நடத்­து­வதை இரு­வ­ரும் சிர­ம­மா­கக் கரு­து­வ­தில்லை.

"அரு­க­ருகே உள்ள மாவட்­டங்­களில் பணி­பு­ரி­வ­தால் அவ­ச­ரத் தேவை­க­ளுக்கு இரு­வ­ரும் எளி­தா­கச் சந்­தித்­துக்­கொள்ள முடி­யும். அரசு எங்­கள்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கைக்கு ஏற்ற வகை­யில் சிறப்­பாகப் பணி­யாற்­று­வோம்," என்­றார்.