ரூ.30 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த ஆயுதப்படை காவலர்

ரூ.30 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த ஆயுதப்படை காவலர்

1 mins read

சென்னை: வெளி­நாடு சென்று திரும்­பி­ய­வ­ரி­டம் இருந்து 30 லட்­சம் ரூபாய் ஹவாலா பணத்தைப் பறித்த ஆயு­தப்­படை காவ­லர் உட்­பட இரு­வரை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த அழ­கு­ராஜா என்­ப­வர், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து விமா­னம் மூல­மாக சென்­னைக்‍கு வந்­துள்­ளார். இவர் 30 லட்­சம் ரூபாய் பணத்­து­டன் திரு­வல்­லிக்­கேணி பகு­திக்‍கு மோட்­டார் சைக்­கி­ளில் சென்­றுள்­ளார். அப்­போது மன்றோ சிலை அருகே காக்­கிச் சீரு­டை­யில் நின்­றி­ருந்த இரு­வர், தாங்­கள் காவ­லர்­கள் எனக் கூறி அழ­கு­ரா­ஜாவை வழி­ம­றித்து சோத­னை­யிட்­டுள்­ள­னர்.

30 லட்­சம் ரூபாய் பணத்­திற்­குண்­டான ஆவ­ணம் எது­வும் அவ­ரி­டம் இல்­லா­த­தால், அது ஹவாலா பணம் என்று கூறி பணத்தைப் பறித்­து­விட்டு அங்­கி­ருந்து தப்­பிச் சென்­ற­னர்.

இது­கு­றித்த புகா­ரின் பேரில் வழக்‍குப்­ப­திவு செய்த காவல்­துறை­யி­னர், ஹவாலா பணத்தைப் பறித்­துச் சென்ற இரு­வரை கைது செய்­த­னர்.

அவர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில் ஆயு­தப்­படை காவ­லர் செந்­தில், அவ­ரது நண்­பர் டைசன் மற்­றும் கூட்­டா­ளி­களு­டன் சேர்ந்து பணத்தை பறித்­துச் சென்­றது தெரி­ய­வந்­தது. தலை­மறை­வான செந்­தி­லின் நண்­பரை காவல்­து­றை­யி­னர் தேடி வரு­கின்­ற­னர்.

அழ­கு­ராஜா வெளி­நா­டு­களில் இருந்து தங்­கம் கடத்தி வரும் 'குருவி'யாகச் செயல்­பட்டு வரு­வ­தும் விசா­ர­ணை­யில் அம்­ப­ல­மா­னது.