பொருநை அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

பொருநை அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

2 mins read
78a2f0f8-880a-4b57-b7ec-722f7d26c440
-

சென்னை: பொருநை அருங்­காட்சி­ய­கத்­துக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று அடிக்­கல் நாட்­டி­னார். மொத்­தம் 13 ஏக்­கர் பரப்­ப­ள­வில் ரூ.15 கோடி செல­வில் இந்த அருங்­காட்­சி­ய­கம் அமைய உள்­ளது.

அதன் பின்­னர் பண்டைக் கால மனித நாக­ரி­கத்­துக்கு சாட்சி­யாக இந்த அருங்­காட்­சி­ய­கம் விளங்கும் என ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தாமி­ர­ப­ரணி ஆற்­றங்­கரைப் பகு­தி­யில் அமைந்­துள்ள 'ஆதிச்­ச­நல்­லூர்' மனித நாக­ரி­கத்­தின் தொட்­டில் எனக் குறிப்­பி­டப்­ப­டு­கிறது. இப்­ப­கு­தியை மத்­திய தொல்­லி­யல் துறை பாது­காக்­கப்­பட்ட பகு­தி­யாக அறி­வித்­துள்­ளது.

"ஆதிச்­ச­நல்­லூ­ரில் நடத்­திய அக­ழாய்­வின்­போது கிடைத்த ஏரா­ள­மான தொல் பொருள்­களை காட்­சிப்­ப­டுத்­தும் வகை­யில் புதிய அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­படும்," என தமி­ழக தொல்­லி­யல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஆதிச்­ச­நல்­லூர் அக­ழாய்­வின்­போது பண்டைக் கால மனி­தர்கள் பயன்­ப­டுத்­திய ஓடு­கள், இரும்புப் பொருள்­கள், காத­ணி­கள், மண்­பாண்­டங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அரிய பொருள்­கள் கிடைத்­தன.

இதை­ய­டுத்து பழங்­கால இயற்கை துறை­மு­க­மாக இருந்த கொற்­கை­யி­லும் அக­ழாய்வு நடத்­தப்­பட்­டது. மேலும், சிவ­களை பகு­தி­யில் நடத்­திய அக­ழாய்­வில் பண்டைக் கால மனி­தர்­கள் வாழ்­வில் பயன்­ப­டுத்­திய பல பொருள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்தே இப்­ப­கு­தி­யில் பொருநை அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­தது.

அதன்­படி, தமி­ழர்­க­ளின் அடை­யா­ளத்தை உலக மக்­க­ளுக்கு எடுத்­துச் சொல்­லும் வகை­யில் அமைய உள்ள இந்த அருங்காட்சி­யகத்­துக்கு நேற்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அடிக்­கல் நாட்­டி­னார்.

"பொருநை அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­படும் போது, ஆதிச்­ச­நல்­லூர், சிவ­களை, கொற்கை ஆகிய மூன்று இடங்­க­ளி­லும் அக­ழாய்­வில் கிடைத்த பண்டைக் கால மனி­தர்­கள் பயன்­ப­டுத்­திய பொருள்­கள் அனைத்­தும் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இதற்­காக மூன்று தனித்­தனி வளா­கங்­கள் அமைக்­கப்­பட உள்­ளது," என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அருங்­காட்­சி­ய­கப் பணி­கள் 18 மாதங்­களில் முடி­வ­டை­யும் என்­றும் பின்­னர் பொது­மக்­கள் பார்வைக்குத் திறக்­கப்­படும் என்றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.