கள்ளச்சாராய வேட்டை: 3,762 பேர் அதிரடிக் கைது

2 mins read

94,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்; விளக்கம் கேட்கிறார் தமிழக ஆளுநர்

சென்னை: அண்­மை­யில் விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் கள்­ளச்­சா­ரா­யம் குடித்து உயி­ரி­ழந்த விவ­கா­ரம் கொலை வழக்­காக மாற்­றப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக காவல்­துறை தலை­வர் சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கள்­ளச்­சா­ரா­யத்­துக்கு 22 பேர் பலி­யான சம்­ப­வம் தொடர்­பாக இதுவரை 13 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர்­கள் மீது கொலை வழக்கு பதி­வாகி உள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார்.

"மாநி­லம் முழு­வ­தும் கள்­ளச்­சா­ரா­யத்தை ஒழிக்­கும் வகை­யில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில், 3,762 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

"கடந்த 13ஆம் தேதி முதல் நடத்­தப்­பட்­டு வரும் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது இரண்டு நாள்­களில் மட்­டும் 1,558 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

"அதன் பிற­கும் நீடித்து வரும் நட­வ­டிக்­கை­யின்­போது அதி­க­மா­னோர் சிக்கி வரு­கின்­ற­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் இருந்து 94,560 லிட்­டர் மது­பானம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது," என டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், விழுப்­பு­ரம் செங்­கல்­பட்­டில் கள்­ளச்­சா­ரா­யம் குடித்து 22 பேர் உயிரி­ழந்த விவ­கா­ரத்­தில், விரி­வான அறிக்கை தாக்­கல் செய்­யு­மாறு, தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லா­ள­ருக்கு ஆளு­நர் ஆர்.என்.ரவி உத்­த­ர­விட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

கள்­ளச்­சா­ராய உயி­ரி­ழப்­பு­கள் தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­கள், கைது செய்­யப்­பட்­டோர் எண்­ணிக்கை, கள்­ளச்­சா­ராய விற்­ப­னை­யைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் குறித்­தெல்­லாம் அந்த அறிக்­கை­யில் விவ­ர­மா­கத் தெரி­விக்­கு­மாறு ஆளு­நர் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­ப­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கள்­ளச்­சா­ராய உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு அளிக்­கப்­படும் நிவா­ர­ணங்­களை கொச்சைப்­படுத்­து­வது எதிர்க்­கட்சித் தலை­வர் பொறுப்­பில் உள்ளவருக்கு அழ­கல்ல என்று அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் எடப்­பாடி பழ­னி­சாமி முதல்­வராக இருந்­த­போது கள்­ளச்­சாராய மரணத்­திற்கு ரூ.25 ஆயிரம் நிவா­ர­ண­மாக வழங்­கப்­பட்­ட­தாகச் சுட்­டிக்­காட்டி உள்ள அவர், ஜெய­ல­லிதா, ஓபி­எஸ் ஆட்­சிக்­காலங்­க­ளி­லும்­கூட கள்­ளச்­சா­ராய மர­ணத்­திற்கு நிவா­ர­ணம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.