உச்ச நீதிமன்றம்: ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை; தமிழர்களின் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த அம்சம்

உச்ச நீதிமன்றம்: ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை; தமிழர்களின் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த அம்சம்

1 mins read

புது­டெல்லி: தமி­ழ­கத்­தில் ஜல்­லிக்­கட்டுப் போட்­டி­களை நடத்தத் தடை இல்லை என உச்ச நீதிமன்­றம் தெரி­வித்­துள்­ளது. இந்­தத் தீர்ப்பை ஜல்­லிக்­கட்டு ஆர்­வலர்கள் வர­வேற்­றுள்­ள­னர்.

ஜல்­லிக்­கட்­டுப் போட்டிக்குத் தடை­வி­திக்­கக் கோரி, விலங்­கு­கள் நல அமைப்­பு­கள் சார்பாக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

இந்த வழக்கை நீதி­பதி கே.எம்.ஜோசப் தலை­மை­யி­லான ஐந்து பேர் கொண்ட அர­சி­யல் அமர்வு விசா­ரித்து வந்­தது.

விசா­ர­ணை­யின்­போது, ஜல்­லிக்­கட்­டில் பங்­கேற்­கும் காளை­கள் துன்­பு­றுத்­தப்­ப­டுத்­து­வ­தாக விலங்­கு­கள் நல அமைப்­பு­கள் குற்­றம்­சாட்­டின.

ஆனால் தமி­ழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தது. ஜல்­லிக்­கட்டு என்­பது தமி­ழர்­க­ளின் கலா­சா­ரம் சார்ந்த நிகழ்வு என்­றும் பாரம்­ப­ரி­யம், இறை வழி­பாடு அம்­சங்­க­ளு­டன் தொடர்­பு­டை­யது என்­றும் உச்ச நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு தனது வாதத்தை முன்­வைத்­தது.

மேலும், ஜல்­லிக்­கட்டு போட்­டி­களை தடை­யின்றி நடத்த ஏது­வாக தமி­ழக அரசு கொண்டு வந்த சட்­டத்­திற்கு இந்­திய அதி­பர் ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தைச் சுட்­டிக்­காட்டி தமி­ழக அரசு, இத்­த­கைய விளக்­கங்­களை கவ­னத்­தில் கொண்டு, விலங்­கு­கள் நல அமைப்­பு­கள் தாக்­கல் செய்த மனுக்­களைத் தள்­ளு­படி செய்ய வேண்­டும் என்று வாதிட்­டது.

அனைத்­துத் தரப்பு வாதங்­களை­யும் செவி­ம­டுத்த உச்ச நீதி­மன்ற அமர்­வா­னது, நேற்று தீர்ப்பு வழங்­கி­யது.

அதில், ஜல்­லிக்­கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்க இய­லாது எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தமி­ழக அரசு முன்­வைத்த வாதங்­களும் ஆவ­ணங்­களும் மன­நிறைவு அளிப்­ப­தா­க­வும் ஜல்­லிக்­கட்டு என்­பது தமி­ழ­கத்­தின் கலா­சா­ரத்­தோடு ஒருங்­கி­ணைந்த அம்­சம் என்­பதை ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் உச்ச நீதி­மன்ற அமர்வு தனது தீர்ப்­பில் குறிப்­பிட்­டுள்­ளது.