சென்னை: பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கிக் குண்டு பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சி செல்லஇருந்த பயணிகள் அனைவரும் வழக்கமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது அக்குறிப்பிட்ட பயணியின் உடைமைகளைச் சோதனையிட்டபோது எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, அவரது பெட்டிகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பெட்டியில் துப்பாக்கிக் குண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணயின்போது அவர் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் பெற்றவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, விசாரணைக்குப் பின்னர் அப்பயணி விடுவிக்கப்பட்டார்.

