சென்னை: ஊட்டியில் செயல்படுத்தப்பட இருந்த ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இத்திட்டத்தால் வன உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
கோடை விடுமுறைக் காலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவர் என்பதை மனதிற்கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகவேல் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
"ஹெலிகாப்டர் சத்தத்தால் வனவிலங்குகள் மிரளும். அவற்றின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்," என்று அவர் கோரி இருந்தார்.
இதையடுத்து உயர் நீதிமன்றம் ஹெலிகாப்டர் சுற்றுலா வுக்குத் தடை விதித்துள்ளது.

