கோவையில் இரு ராணுவ தொழில் பூங்காக்கள்

கோவையில் இரு ராணுவ தொழில் பூங்காக்கள்

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தின் கோவை மாவட்­டத்­தில் இரண்டு ராணுவத் தொழில் பூங்­காக்­கள் அமைய உள்­ளன. இதற்­கான நட­வ­டிக்­கை­களை தமி­ழக தொழில் வளர்ச்சி நிறு­வ­ன­மான 'டிட்கோ' மேற்­கொண்டு வரு­கிறது.

நாடு முழு­வ­தும் ராணு­வம், விமா­னத்­தொ­ழில் சார்ந்த தொழில் பூங்­காக்­களை அமைக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகை­யில் கோவை மாவட்­டத்­தில் ராணுவத் தொழில் பூங்காக்கள் அமைய உள்ளன.

கோவை மாவட்­டம் வாரப்­பட்டி­யில் 400 ஏக்­கரிலும் சூலூர் பகுதியில் 200 ஏக்கரிலும் ராணுவத் தொழில் பூங்கா அமைக்­கப்­பட உள்­ளதாக டிட்கோ நிறு­வ­னத் திட்ட இயக்­கு­நர் கிருஷ்­ண­மூர்த்தி தெரிவித்துள்ளார்.

"மத்­திய அரசு ஆயு­தங்­கள் இறக்­கு­ம­திக்குத் தடை விதித்­துள்­ள­தால், உள்­நாட்­டில் உள்ள ஆயுத உற்­பத்தித் தொழிற்­சா­லை­க­ளுக்கு மிகப்­பெ­ரிய வாய்ப்பு உரு­வாகி உள்­ளது. அடுத்த மூன்று ஆண்­டு­களில் உள்­நாட்டில் ரூ1.25 லட்­சம் கோடி மதிப்­புள்ள ஆயு­தங்­களை உற்­பத்தி செய்ய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது," என்­றார் கிருஷ்­ண­மூர்த்தி.

டிட்கோ என்­பது தமி­ழ­கத்­தில் உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­களை மேற்­கொள்­ளும் நிறு­வ­ன­மா­கும்.ராணுவத் தொழில் பெரு­வ­ழித்­தடத்தை செயல்­ப­டுத்­தும், முகமை நிறு­வ­ன­மா­க­வும் செயல்­ப­டு­கிறது.