போதை ஊசி, மாத்திரைகள்: அரசு கடும் எச்சரிக்கை

போதை ஊசி, மாத்திரைகள்: அரசு கடும் எச்சரிக்கை

1 mins read

ஈரோடு: போதை ஊசி, மாத்­திரை விற்­பனை செய்­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­சர் முத்து­சாமி கூறி­னார்.

ஈரோட்­டில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அம்­மா­வட்­டத்­தில் போதை மாத்­தி­ரை­களை விற்­ற­தாக காவல்­துறை ஏழு பேரை கைது செய்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டாரா்.

"தமி­ழ­கம் முழு­வ­தும் போதை ஊசி, மாத்­திரை பயன்­ப­டுத்­து­வது, கள்­ளச்­சா­ரா­யம் காய்ச்­சும் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. முதல்­வ­ரும் காவல்­துறை தலை­வ­ரும் அதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ள­னர்.

"்போதை மாத்­தி­ரை­கள் விற்­பனை செய்­ப­வர்­களைக் கண்­ட­றிந்து கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். நாங்­கள் யாருக்­கும் துணை­யாக இல்லை," என்­றார் அமைச்­சர் முத்­து­சாமி.