பானங்கள் வழங்கி கொண்டாடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

பானங்கள் வழங்கி கொண்டாடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

1 mins read
61564431-d47f-478c-bbb5-7cc59f952dca
-

சிவ­கங்கை: ஜல்­லிக்­கட்டு நடத்து­வ­தற்கு தடை இல்லை என உச்ச நீதி­மன்­றம் அறி­வித்­ததை அடுத்து தமி­ழ­கத்­தில் கொண்­டாட்­டச் சூழல் நில­வு­கிறது. உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பை ஜல்­லிக்­கட்டு ஆர்­வ­லர்­கள் வர­வேற்று கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

சிவ­கங்கை மாவட்­டம் மானா­மதுரை பகு­தி­யைச் சேர்ந்த ஜல்­லிக்­கட்டு ஆர்­வ­லர்­கள் இது கோடை­கா­லம் என்­ப­தால் சர்­பத், மோர் போன்ற பானங்­க­ளைப் பொது­மக்­க­ளுக்கு வழங்­கி­னர்.

மேலும் ரோஜா பூக்­கள், செடி கன்­று­க­ளை­யும் விநி­யோ­கித்து தங்­கள் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னர்.

மேலும், சாலை­யில் நடந்து சென்­ற­வர்­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் பேருந்து, வாக­னங்­களில் சென்­ற­வர்­க­ளுக்­கும் அவை வழங்­கப்­பட்­டன.

"இனி எந்­த­வி­த­மான தடை­களும் சிக்­கல்­களும் இன்றி ஜல்லிக்­கட்டுப் போட்­டி­களை நடத்த இய­லும்.

"தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரி­யத்­தைப் பாது­காக்­கும் வகை­யில் ஜல்­லிக்­கட்டு நடை­பெ­றும்," என ஜல்­லிக்­கட்டு ஆர்­வ­லர்­கள் தெரி­வித்­த­னர்.