வடக்குப்பட்டு பகுதியில் அகழாய்வு தொடங்கியது

2 mins read
f568facf-7022-479c-9943-77565cabde9d
-

காஞ்­சி­பு­ரம்: தமி­ழ­கத் தொல்­லி­யல் துறை சார்­பாக காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், வடக்­குப்­பட்டு பகு­தி­யில் இரண்­டாம் கட்ட அகழ்­வா­ராய்ச்சி தொடங்கி உள்­ளது. இங்கு பல்வேறு அரிய தொல்­பொ­ருள்­கள் கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களி­லும் தொல்­லி­யல் துறை அதிகா­ரி­களும் ஆய்­வா­ளர்­களும் அகழ்­வா­ராய்ச்­சிப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அந்த வகை­யில், காஞ்­சி­பு­ரம் மாவட்­டம் குன்­றத்­தூர் ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட வடக்­குப்­பட்டு ஊராட்­சி­யில், கடந்த ஆண்டு முதற்­கட்ட அகழ்­வா­ராய்ச்சி நடை­பெற்­றது. சுமார் நான்கு மாதங்­கள் நீடித்த அக­ழாய்­வின்­போது தங்க அணி­க­லன்­கள் உள்­ளிட்ட அரிய பொருள்­கள் கிடைத்­தன.

இதன் மூலம் பழங்­கால நாகரி­கம் குறித்த விவ­ரங்­கள் தெரி­ய­வரும் என ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர். இதை­ய­டுத்து பழங்­கால கட்­டட அமைப்­புக்­குச் சான்­றாக சில பொருள்­கள் கிடைத்­தன.

பழைய கற்­களை பயன்­படுத்தி கட்­ட­டம் கட்­டப்­பட்­டுள்ளது என்­றும் அது பல்­ல­வர் காலத்தைச் சேர்ந்­த­தாக இருக்­க­லாம் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

மேலும், பழங்­கால கல் மணி­கள், கண்­ணாடி மணி, எலும்பு, செப்புக் காசு, பானை­யோ­டு­கள், கண்­ணா­டிப் பொருள்­கள் உள்ளிட்ட பல்­வேறு பொருள்­களை அதி­கா­ரி­கள் வடக்குப்பட்டு பகு­தி­யில் கண்­டெ­டுத்­துள்­ள­னர்.

இவ்­வாறு முத­ற்­கட்ட அக­ழாய்­வில் கிடைந்த பொருள்­களை வகைப்­ப­டுத்­தும் பணி­கள் நடந்து வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்ள நிலை­யில், வடக்­குப்­பட்டு பகு­தி­யில் கிடைத்­துள்ள கற்­க­ரு­வி­களை வைத்­துப் பார்க்­கும்­போது அங்கு குறைந்­த­பட்­சம் 12,000 முதல் ஒன்­றரை லட்­சம் ஆண்­டு­கள் முன்பு வரை மனி­தர்­கள் வாழ்ந்­தி­ருக்­க­லாம் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

"வடக்­குப்­பட்டு பகு­தி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட கற்­கால கரு­வி­கள் அனைத்­தும் கீழ­டி­யில் கிடைத்­ததை­விட பழமை வாய்ந்­தவை. கீழடி என்­பது வளர்ந்த நாக­ரி­கம் எனில், வடக்­குப்­பட்­டியில் கிடைத்­தவை கற்­காலப் பொருள்­கள்," என்று ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­றனர்.

இத­னி­டையே, வடக்­குப்­பட்டு பகு­தி­யில், இந்­தி­யத் தொல்­லி­யல் துறை கண்­கா­னிப்­பா­ளர் மு. காளி­முத்து தலை­மை­யில் இரண்­டாம் கட்ட அக­ழாய்­வுப் பணி துவங்­கி உள்­ளது. அடுத்த நான்கு மாதங்­க­ளுக்கு இந்­தப் பணி­கள் நடை­பெறும் என்­றும் மேலும் பல முக்­கிய பொருள்­கள் கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.