தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்

1 mins read

தஞ்சை: தமி­ழ­கத்­தின் தூத்­துக்­குடி, சேலம், தஞ்­சா­வூர் ஆகிய மூன்று மாவட்­டங்­களில் சிறிய 'டைடல்' (தக­வல் தொழில்­நுட்ப) பூங்­காக்­கள் அமைக்­கப்­பட உள்ளன. இத்­திட்­டத்­துக்­கான அடிக்­கல் நாட்டு விழா நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இதில் பங்­கேற்­றுப் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், தமி­ழகத்­தில் தக­வல் தொழில்­நுட்ப சூழல் அமைப்பை மாநி­லம் முழு­வ­தும் விரி­வு­ப­டுத்­தும் வகை­யில் இப்­பு­திய திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் என்­றார்.

தமி­ழ­கத்­தில் தற்­போது இரண்டு, மூன்­றாம் நிலை­யில் உள்ள நக­ரங்­களில் ஏறத்­தாழ 50 ஆயி­ரம் சதுர அடி முதல் ஒரு லட்­சம் சது­ரடி பரப்­பில் ஏழு சிறிய 'டைடல் தக­வல் தொழில்­நுட்­பப் பூங்­காக்­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லை­யில் மேலும் மூன்று இடங்­களில் அத்­த­கைய பூங்­காக்­கள் அமைக்க முதல்­வர் அடிக்­கல் நாட்­டி­யுள்­ள­தாக அரசு செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.

இப்­பூங்­காக்­கள் மூலம் தூத்துக்­குடி, தஞ்­சா­வூர், சேலம் மாவட்­டங்­க­ளி­லும் அவற்­றின் சுற்று­வட்­டாரப் பகு­தி­க­ளி­லும் வசித்து­வ­ரும் ஆயி­ரக்­க­ணக்­கான படித்த இளை­யர்­க­ளுக்கு, குறிப்­பாக பெண்­க­ளுக்கு அவர்கள் வசிக்­கும் மாவட்­டங்­களிலேயே தக­வல் தொழில்­நுட்பம் சார்ந்த பணி­களில் வேலை பெறு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­படும் என்று அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.