சென்னை: கத்தார், துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.27 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் கைதாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்மைக்காலமாக தமிழக விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தொடர்ந்து பலர் கைதானபோதிலும் தங்கக் கடத்தல் குறையவில்லை என்கிறார்கள் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்.

