கிருஷ்ணகிரியில் நடன, இசைக் கலைஞர்கள் காணப்படும் அரிய வகை நடுகல் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரியில் நடன, இசைக் கலைஞர்கள் காணப்படும் அரிய வகை நடுகல் கண்டெடுப்பு

2 mins read
a7714b97-8956-46b0-8e97-f144d857fe4d
-

கிருஷ்­ண­கிரி: போச்­சம்­பள்ளி பகுதி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வின்­போது அரிய வகை நடுகல் ஒன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் இசை, நட­னக் கலை­ஞர்­க­ளைப் பற்­றிய தக­வல்­கள் காணப்­ப­டு­வ­தாக ஆய்வை மேற்­கொண்ட தர்­ம­புரி அரசு கலைக்­கல்­லூரி வர­லாற்­றுத் துறை பேரா­சி­ரி­யர் சந்­தி­ர­சே­கர் தெரி­வித்­துள்­ளார்.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம் போச்­சம்­பள்ளி வட்­டம் பண்­ணந்­தூர் அருகே புளி­யம்­பட்டி ஊராட்­சிக்கு உட்­பட்ட அரிச்­சந்­தி­ரன் கோவிலில் தாம் ஆய்வு மேற்­கொண்­ட­தாகவும் அக்­கோ­வில் ஏறத்­தாழ 300 ஆண்டு­கள் பழ­மை­யா­னது என்றும் அவர் கூறி­யுள்­ளார்.

தற்­போது கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ள நடு­கல்­லில், இசைக் கலை­ஞர் ஒரு­வர் தன் கையில் உள்ள சிறிய தப்­பட்டை ஒன்றை இசைத்­த­வாறு காணப்­ப­டு­கி­றார்.

"அவர் மேல்­சட்டை, வேட்டி, காது­களில் பெரிய குண்­ட­லங்­களை அணிந்­துள்­ளார். மேலும், இசைக்­கும்­போதே, இவ­ரு­டைய கால்­களும் சிறிது அசைந்து ஆடு­வ­து­போல உள்­ளது. அரு­கில் உள்ள மற்­றொரு ஆண் சேவை ஆட்­டம் எனப்­படும் குரு­மன் பழங்­குடி மக்­க­ளின் நட­னத்தை ஆடு­வ­து­போல உள்­ளது," என்­கி­றார் பேரா­சி­ரி­யர் சந்­தி­ர­சே­கர்.

இந்த நடு­கல்­லில் ஆடை, ஆப­ர­ணங்­கள் தெளி­வா­கக் காட்­டப்­பட்­டுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்ள அவர், நட­னக் கலை­ஞ­ரின் வலது கை மேல்­நோக்கி இருப்­பது நடன அசை­வு­களை விளக்­கு­வது போல் உள்­ளது என்­கி­றார்.

"நட­னக் கலை­ஞர் அணிந்­துள்ள உடை­யா­னது, கழுத்­தி­லி­ருந்து இடுப்பு வரை தற்­கால தெருக்­கூத்து கலை­ஞர்­கள் அணி­வது போன்ற ஒரே ஆடை­யாக காட்­டப்­பட்­டுள்­ளது. இடது புறம் ஒரு தூண் போன்று காணப்­ப­டு­கிறது.

"பொது­வாக இசைக் கலை­ஞ­ரு­டைய நடு­கல் மட்­டுமே கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் இசைக் கலை­ஞர் இசைப்­பது போன்­றும் நட­னக் கலை­ஞர் நடனம் ஆடு­வது போன்­றும் ஒரே கல்­லில் இருப்­பது இங்கே காண முடி­கிறது. இத்­த­கைய நடு­கல் கண்­ட­றி­யப்­ப­டு­வது இதுவே முதல்­முறை," என்­கி­றார் பேரா­சி­ரி­யர் சந்­தி­ர­சே­கர்.

தப்­பட்டை,சேவை ஆட்­டம் போன்­றவை குரு­மன்ஸ் இன பழங்­குடி மக்­க­ளின் பழக்க வழக்­கங்­களில் ஒன்று என்­றும் இது குரு­மன்ஸ் இன மக்­க­ளு­டைய நடு­கல் எனக் கூற­லாம் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.