மணல்குவாரி முறைகேடுகளைக் கண்டித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்

மணல்குவாரி முறைகேடுகளைக் கண்டித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள மணல் குவா­ரி­களில் பெரும் முறை­கே­டு­களும் குற்­றச்சம்­ப­வங்­களும் நிகழ்­வ­தாக தமிழ்­நாடு மாநில மணல் லாரி உரி­மை­யாளர்­கள் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்பு குற்­றம்­சாட்டி உள்­ளது.

இது தொடர்­பாக தமி­ழக அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி மாநிலம் தழு­விய அள­வில் உண்ணா­வி­ர­தப் போராட்­டம் நடை­பெ­றும் என அக்­கூட்­டமைப்பு அறி­வித்­துள்­ளது.

ஜூன் 6ஆம் தேதி உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் நடை­பெற உள்ள நிலை­யில், அக்­கூட்­ட­மைப்­பி­னர் கரூ­ரில் உள்ள அரசு உட்­கோட்ட உதவி செயற்­பொ­றி­யா­ளர் அலு­வ­ல­கத்­தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்­துள்­ளது.

குவா­ரி­களில் நடை­பெ­றும் குற்ற சம்­ப­வங்­க­ளை­யும் தவ­று­களை­யும் சுட்­டிக்­காட்­டும் லாரி உரி­மை­யா­ளர்­கள் மீது தே­வை­யின்றி காவல்­துறை வழக்­குப் பதிவு செய்­துள்­ளது என்­றும் அவற்­றைக் கைவிட வேண்­டும் என கூட்­ட­மைப்­பின் நிர்­வா­கி­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

மணல் குவா­ரி­யில் தற்­போது பின்­பற்­றப்­படும் நடை­மு­றை­கள் கார­ண­மாக லாரி ஓட்­டு­நர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் நடை­மு­றைச் சிக்­கல்­கள் களை­யப்­பட வேண்­டும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்­ட­மைப்பின் தலை­வர் யுவராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.