சென்னை: எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் தமிழகம், இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களும் தற்போது வெளியாகி உள்ளன.
மத்திய அரசு 'சாகர்மாலா' என்ற திட்டத்தின்கீழ், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாநிலங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே சுற்றுலா கப்பல்கள் இயக்க, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது.
இது இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் என்றும் மூன்று நாள் பயணத்தொகுப்புக்கு ஒரு தம்பதியர்க்கு ரூ.85 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறப்படும் பயணியர் கப்பல் 24 மணி நேரத்திற்குள், இலங்கையின் பல்வேறு துறைமுகங்களுக்குச் சென்றடையும். இந்த கப்பலில், ஒரே நேரத்தில் 1,600 பேர் வரை பயணம் மேற்கொள்ள இயலும்.

