மா.சுப்பிரமணியன்: 33% பசுமைப் போர்வையை உருவாக்குவதே தமிழக அரசின் இலக்கு

1 mins read
5ad90e5f-0635-40a8-8c36-a210e0695cb0
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 33 விழுக்­காடு அள­வில் பசு­மைப்போர்­வையை உரு­வாக்­கு­வதே அர­சின் இலக்கு என்று மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை பெசன்ட்­ந­கர் கடற்­க­ரைப் பகு­தியைத் தூய்மைப்­படுத்­தும் நிகழ்ச்­சி­யில் அவர் பங்­கேற்­றார். அதன் பின்­னர் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், நெகி­ழிப் பொருள்­களை உள்­ள­டக்­கிய குப்பை­களைக் கடற்­க­ரை­யில் போடு­வதைப் பொது­மக்­கள் தவிர்க்க வேண்­டும் என வலி­யுறுத்­தி­னார்.

இது­தொ­டர்­பாக விழிப்­புணர்வு ஏற்­ப­டுத்­தும் நோக்­கத்­து­ட­னேயே கடற்­க­ரை­யில் தூய்­மைப்­பணி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"நெகி­ழிப் பொருள்­கள் பல ஆண்­டு­களானா­லும் மக்­காத்­தன்மை கொண்­ட­தாக, கடல்­வாழ் உயி­ரி­னங்­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவையாக இருக்கின்றன. தமிழகம் 130,060 கிலோ மீட்டர் பரப்­ப­ளவு கொண்­டது. ஒவ்­வொரு நாட்­டி­லும் 30 விழுக்­காடு அள­வுக்­குப் பசுமை பரப்பு இருக்க வேண்­டும் என்று அறி­வி­யல் மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் வல்­லு­நர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன். எனி­னும் தமி­ழ­கத்­தில் பசுமை பரப்பு என்­பது 30,842.22 சதுர கிலோ மீட்­டர் என்ற அள­வில்­தான் உள்­ளது என்று சுட்­டிக்­காட்­டிய அவர், மேலும் 12,076 சதுர கிமீ பரப்­பில் பசு­மைப்போர்­வையை உரு­வாக்க வேண்­டி­யுள்­ளது என்­றார்.

"இதைத் தமி­ழக அர­சின் கடமை­யா­கக் கரு­து­கி­றோம். இந்தப் பணியை தமி­ழக அரசு புனி­தக் கட­மை­யா­கக் கருதி, 33% பசுமைப் பரப்பு என்ற இலக்கை எட்­டும். இதற்­காகக் கோடிக்­கணக்­கான மரங்­களை நடும் பணி­களை முதல்­வர் தொடங்கி வைத்­துள்­ளார்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.