சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்திய இருவர் பலி

2 mins read

தஞ்சை: டாஸ்­மாக் மதுக்­கூ­டத்­தில் விற்­கப்­பட்ட சட்­ட­வி­ரோத மதுவை வாங்கி அருந்­திய இரு­வர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் தஞ்­சை­யில் பர­ப­ரப்­பை­யும் புதிய விவா­தங்­களை­யும் ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதுதொடர்­பாக டாஸ்­மாக் மதுக்­கடை ஊழி­யர்­கள் இரு­வர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்ட நிலை­யில், இரண்டு பேரைக் காவல்­துறை கைது செய்­தது.

அண்­மை­யில்­தான் கள்­ளச்­சாரா­யம் அருந்­திய 23 பேர் மரணம் அடைந்­த­னர். அதை­ய­டுத்து மாநிலம் தழு­விய அள­வில் கள்ளச்­சா­ரா­யம், முறை­கே­டாக மது விற்போர் மீது கடும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. இது­வரை மூவா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கைதாகி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தஞ்­சையை சேர்ந்த மீன் வியா­பா­ரி­யான குப்பு­சாமி (68 வயது), கார் ஓட்­டு­நர் குட்டி விவேக் (36 வயது) ஆகிய இரு­வ­ரும் நேற்று முன்­தி­னம் தங்­களு­டைய வழக்­க­மான பணி­யைத் தொடங்­கும் முன்­னர் வீட்­டுக்கு அருகே உள்ள மதுக்­க­டைக்­குச் சென்­றுள்­ள­னர்.

ஆனால் மதுக்­க­டை­கள் 12 மணிக்­குத்­தான் திறக்­கப்­படும் என்­ப­தால், அரு­கில் உள்ள மதுக்­கூ­டத்­துக்­குச் சென்று, அங்கு சட்­ட­வி­ரோ­த­மாக விற்­கப்­பட்ட மதுவை வாங்கி அருந்தியுள்ளனர்.

ஆனால் மது அருந்­திய சில நிமி­டங்­க­ளி­லேயே இரு­வ­ரும் மயங்­கி­வி­ழுந்து உயி­ரி­ழந்­த­னர்.

இத­னால் தஞ்சை மாவட்­டத்­தி­லும் கள்­ளச்­சா­ரா­யம் அருந்தி இருவர் உயி­ரி­ழந்­த­தாகச் சமூக ஊட­கங்­களில் தக­வல் பர­வி­யது. ஆனால் இரு­வ­ரும் அருந்­திய மதுவில் நஞ்சு கலந்­தி­ருந்­தது என்­றும் இரு­வ­ரும் உயிரை மாய்த்­துக்­கொள்ள திட்­ட­மிட்­டிருக்­க­லாம் என்­றும் தஞ்சை மாவட்ட ஆட்­சி­யர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், மது விடுதி உரிமை­யா­ள­ரும் அங்கு பணி­யாற்­றிய ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மேலும், மதுக்­கூ­டத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக மது விற்­கப்­பட்­டதைக் காவல்­து­றை­யி­டம் தெரி­விக்­காத டாஸ்­மாக் ஊழி­யர்­கள் 4 பேர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்டனர்.