நான்கு மடங்காக அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்

1 mins read

காஞ்சிபுரம்: கொரோனா நெருக்­கடி காலத்­துக்­குப் பிறகு தமி­ழ­கம் வரும் வெளி­நாட்டுச் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை சீராக அதி­க­ரித்து வந்துள்ளதாகச் சுற்­று­லாத்­துறை அமைச்­சர் கா.ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

காஞ்­சி­பு­ரத்­தில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்­டு­களில் மட்­டும் ஏறத்­தாழ 800,000 சுற்­று­லாப் பய­ணி­கள் தமி­ழ­கத்­தில் உள்ள சுற்று ்­லாத் தலங்­க­ளுக்கு வருகை புரிந்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

"அதா­வது, ஒட்­டு­மொத்­த­மாக ஒப்­பீட்­ட­ள­வில் பார்க்­கும்­போது, தமி­ழ­கத்­துக்­கான சுற்று­லாப் பய­ணி­கள் எண்­ணிக்கை நான்கு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. பய­ணி­கள் எண்­ணிக்கை மேலும் அதி­கரிக்­கும்," என்­றார் அமைச்­சர் ராமச்­சந்­தி­ரன்.