சென்னை: திமுக அமைச்சர்களுக்குப் பல்வேறு ஊழல்களில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அதிமுக தலைமை, இது தொடர்பாக தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளது.
நேற்று காலை கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில், அதிமுகவினர் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். அளுநரை சந்தித்தபோது அவரிடம் புகார் மனுவை அளித்த பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஆளுநரிடம் திமுக அரசின் இரண்டாண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் புகார் அளித்ததாகத் தெரிவித்தார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் அதுகுறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்ததாகவும் இபிஎஸ் கூறினார். திமுகவின் ஊழல் பணம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுவது போல தெரிகிறது என்றார் பழனிசாமி.

