தனியார் பள்ளி இயக்குநர்: அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடம்

தனியார் பள்ளி இயக்குநர்: அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடம்

1 mins read

சென்னை: அனைத்து வகை பள்­ளி­க­ளி­லும் தமிழ் கட்­டாய மொழிப் பாட­மாக இருக்க வேண்­டும் என தனி­யார் பள்­ளி­கள் இயக்­கு­னர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

மாண­வர்­க­ளுக்­குத் தமிழ் மொழி­யைத் திறம்­ப­டக் கற்­பிக்­கத் தகு­தி­யான ஆசி­ரி­யர்­களை தனி­யார் பள்ளி நிர்­வா­கங்­கள் நிய­மிக்க வேண்­டும் என­வும் அர­சாணை ஒன்­றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"மற்ற பாடங்­க­ளுக்கு பள்ளி அள­வில் நடத்­தப்­படும் கால­முறை தேர்­வு­கள் தமிழ் பாடத்­திற்­கும் நடத்­தப்­பட வேண்­டும்.

மாவட்ட கல்வி அலு­வ­லர்­கள் (தனி­யார் பள்­ளி­கள்) அனைத்து பள்­ளி­க­ளி­லும் தகு­தி­யான ஆசிரி­யர்­க­ளால் தமிழ் கற்­பிக்­கப்­ப­டு­வதை கண்­கா­ணித்து உறுதி செய்ய வேண்­டும்," என தனி­யார் பள்­ளி­க­ளுக்­கான இயக்­கு­நர் மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தமிழ்­நாடு கற்­றல் சட்­ட­மா­னது 2006இன் படி 2015-16ஆம் கல்­வி­யாண்டு முதல் ஒன்­றாம் வகுப்பு தொடங்கி, பத்­தாம் வகுப்பு வரை நீட்­டிக்­கப்­படும் என முன்பே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­ததை அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"அதன்­படி, 2024-2025ஆம் கல்­வி­யாண்­டிற்­குள் மாநில பாடத்­திட்­டத்தை தவிர, அனைத்து வாரி­யங்­க­ளு­டன் இணைக்­கப்­பட்­டுள்ள அனைத்து தனி­யார் பள்­ளி­களும் ஒன்­றி­லி­ருந்து பத்­தாம் வகுப்பு வரை­யி­லான அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் தமிழ் கற்­பிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய வேண்­டும்.

"தனி­யார் பள்­ளி­க­ளின் இயக்­கு­னர் பாடத்­திட்­டம், அதற்­கான தேர்வு முறையை நிர்­ண­யிப்­பார். அனைத்து தனி­யார் பள்­ளி­க­ளுக்­கும், 10ஆம் வகுப்­பு தமிழ்த் தாளுக்­கான இறுதி எழுத்­துத் தேர்வு தமிழ்­நாடு அர­சுத் தேர்­வு­கள் இயக்­கு­ந­ரால் நடத்­தப்­படும். பின்னர் அதற்­கென தனிச் சான்­றி­தழ் வழங்­கப்­படும்," என தமிழக அரசு வெளியிட்ட அர­சா­ணை­யில் மேலும் குறிப்பிடப்­பட்­டுள்­ளது.