தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடிமைப் பணித்தேர்வில் தமிழக மாணவி சாதனை

2 mins read
96ee7901-586f-4a0d-8aca-1459d39ed355
-

முதல் நான்கு இடங்களைக் கைப்பற்றிய மாணவிகள்

சென்னை: ஐஏ­எஸ், ஐபி­எஸ் உள்­ளிட்ட உயர் பத­வி­க­ளுக்­கான முதல் நிலைத் தேர்­வில் (யுபி­எஸ்சி) மின்னியல் நிபுணரின் மகள் தமி­ழக அள­வில் முதல் மாண­வி­யாக தேர்ச்சி பெற்று சாதித்­துள்­ளது.

இந்­திய அள­வில் அவர் 107ஆவது இடம் பெற்­றுள்­ளார். இதை­ய­டுத்து அவ­ருக்கு வாழ்த்­து­கள் குவி­கின்­றன.

சென்னை பெரம்­பூ­ரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி யுபி­எஸ்சி தேர்­வில் அகில இந்­திய அள­வில் 107வது இடம் பிடித்து, தமிழ்­நாடு அள­வில் முதல் இடத்தை பெற்று சாத­னைப் படைத்­துள்­ளார்.

யுபி­எஸ்சி தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடை­பெற்­றது. அதில் தகுதி பெற்­ற­வர்­கள், செப்­டம்­பர் மாதம் முதன்மை தேர்வை எழு­தி­னர். இதில் தேர்ச்சி பெற்­ற­வர்­க­ளுக்கு கடந்த ஜன­வரி முதல் மே மாதம் வரை ஆளு­மைத் தேர்வு நடை­பெற்­றது.

இந்த நடை­மு­றை­க­ளுக்­குப் பின்­னர் இறு­தித் தேர்­வில் தேர்ச்சி பெற்­ற­வர்­க­ளின் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இம்முறை நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், முதல் நான்கு இடங்­களைப் பெண்­கள் பெற்­றுள்­ள­னர் என்­பது சிறப்­பம்­சம்.

இத்­தேர்­வில் சென்னை, பெரம்­பூர் பகு­தி­யைச் சேர்ந்த மாணவி ஜீஜீ தமி­ழ­கத்­தில் முத­லி­டம் பிடித்­துள்­ளார். அவ­ரது தந்தை மின் வல்­லு­ந­ரா­கப் வேலை பார்த்து வரு­கி­றார்.

சென்னை கல்­லூ­ரி­யில் படித்து வரும் ஜீஜீ மிகக் கடி­னம் எனக் கரு­தப்­படும் இத்­தேர்­வில் முதல் முயற்­சி­யி­லேயே வெற்றி கண்­டுள்­ளார்.

இதையடுத்து அவருக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இம்­முறை இஷிதா கிஷோர் என்ற பெண் இந்­திய அள­வில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்­துள்­ளார்.

தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடுமையாகப் பயிற்சி பெற்று சாதித்துக் காட்டியதாக வெற்றி பெற்றவர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் விரைவில் பணியமர்த்தப்படுவர் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.