காவலரை அடித்து உதைத்த உகாண்டா பெண் கைதி

1 mins read

சென்னை: சென்­னை­யில் புழல் சிறை­யில் உள்­ளூர், வெளி­நாடு­க­ளைச் சேர்ந்த 150க்கும் மேற்­பட்ட பெண் கைதி­கள் அடைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

பொது­மக்­களும் உற­வி­னர்­களும் பெண் கைதி­க­ளுக்­காக கொடுத்­து­விட்­டுச் சென்ற பழம், துணி­ம­ணி­களைப் பெற்­றுக்­கொள்ள கைதி­களை வரி­சை­யில் வரும்­படி அய­னிங் ஜனதா, 35, என்ற சிறைக்­கா­வல் அதி­காரி உத்­த­ர­விட்­டார்.

அப்­போது உகாண்­டா­வைச் சேர்ந்த நச­மா­ச­ரம், என்ற 35 வயது கைதி தனக்கு உட­னடி­யாக பழம் வேண்­டு­மென்று அடம்­பி­டித்­தார்.

அவரை வரி­சை­யில் வரும்­படி பெண் காவ­லர் கேட்­டுக்­கொண்­டார். அத­னால் கடு­மை­யாக் கோபம­டைந்த நச­மா­ச­ரம் அந்­தக் காவ­லரை அடித்து உதைத்து சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னார்.

அதி­கா­ரி­கள் பெண் காவ­லரை மீட்­ட­னர். இதன்­தொ­டர்­பில் புகார் தாக்­க­லாகி உள்ளது.