குமரியில் ஓராண்டில் கண்ணாடிக் கூண்டு பாலம் தயாராகிவிடும்

குமரியில் ஓராண்டில் கண்ணாடிக் கூண்டு பாலம் தயாராகிவிடும்

1 mins read

கன்­னி­யா­கு­மரி: கன்­னி­யா­கு­மரி கடல் நடு­வில் அமைந்­துள்ள விவே­கா­னந்­தர் நினைவு மண்­ட­பம்- 133 அடி உயர திரு­வள்­ளு­வர் சிலை இடையே ரூ.37 கோடி செல­வில் கண்­ணாடி இழை­ பாலம் அமைக்­கும் பணிக்கு நேற்று அடிக்­கல் நாட்­டப்­பட்­டது.

அடிக்­கல் நாட்டி பேசிய தமிழக பொதுப்­ப­ணித்­துறை, நெடுஞ்­சாலை, சிறு­து­றை­மு­கங்­கள் துறை அமைச்­சர் எ.வ.வேலு, பாலம் அமைக்­கும் பணி ஓராண்டுக்­குள் முடி­வடை­யும் என்­றார்.

விவே­கா­னந்­தர் மண்­ட­பத்­திற்­கும் திரு­வள்­ளு­வர் சிலைக்­கும் இடையில் குளிர்­சா­தன பட­கு­கள் பயணத்தை அமைச்­சர் தொடங்கி வைத்­தார்.

இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­களில் இருந்­தும் வெளி­நாட்­டில் இருந்­தும் ஆண்­டுக்கு 7.5 மில்­லி­யன் சுற்­றுலா பய­ணி­கள் கன்­னி­யா­கு­ம­ரிக்கு வருகை தரு­கின்­ற­னர். விவே­கா­னந்­தர் மண்­ட­பம், திரு­வள்­ளு­வர் சிலை ஆகி­ய­வற்றைப் பட­கில் பார்­வை­யி­ட அவர்கள் விரும்புகிறார்கள்.