'ஐந்தாண்டு ஆகியும் இதுவரை வழக்கு இல்லை'

1 mins read
737b7897-3f66-4c41-8701-92f0480e9b90
-

தூத்­துக்­குடி: தூத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலையை எதிர்த்து ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன் நடந்த போராட்­டத்­தில் குடி­மக்­கள் 13 பேர் காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் குண்­டு­க­ளுக்கு இரை­யா­யி­னர்.

அந்­தச் சம்­ப­வம் பற்றி விசா­ரிக்க அருணா ஜெக­தீ­சன் தலை­மை­யில் குழு அமைக்­கப்­பட்­டது.

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதிக்­கும் 23ஆம் தேதிக்­கும் இடை­யில் நடந்த அந்­தக் கொலை­க­ளுக்கு 17 காவல்­துறை அதி­கா­ரி­களும் நான்கு வரு­வாய் துறை அதி­கா­ரி­களும் கார­ணம் என்று அந்­தக் குழு முடிவு செய்­தது. இருந்­தா­லும் ஒரு­வர் மீது கூட இன்­ன­மும் வழக்­குத் தொடுக்­கப்­ப­ட­வில்லை.

தான் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக இப்போதைய அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளரான மரினா பிரபு என்பவர் கூறினார்.

அந்தச் சம்பவம் பற்றி முதலில் சிபிசிஐடி விசாரித்தது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சிபிஐ தன்வசம் எடுத்துக்கொண்டது.

சிபிஐ, திருமலை என்ற காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 101 பேர் மீது புகார்களைத் தாக்கல் செய்தது. அந்த அதிகாரி பிறகு டிஎஸ்பி பதவி உயர்வு பெற்றார்.