தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறு செய்த நடத்துநர் தரையில் உருண்டார்

1 mins read
35831389-00d0-45ef-b13f-a6c92cc68b46
-

நெல்லை: பணி­யில் இருந்த பேரு­ந்து நடத்­து­நர் ஒரு­வர் தான் செய்த தவறை மறைக்க தரை­யில் விழுந்து உருண்டு அழுது புரண்­டார்.

திருப்­பூ­ரில் இருந்து நாகர்­கோ­வில் நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த அரசு பேருந்து நெல்லை பேருந்து நிலை­யம் சென்­ற­டைந்­த­போது நாங்­கு­நேரி செல்­லும் பய­ணி­கள் பேருந்­தில் ஏறி­னர்.

ஆனால் பேருந்து நாங்கு நேரி­யில் நிற்­காது. ஆகை­யால் நேரே நாகர்­கோ­வில் போவோர் மட்­டும் ஏற­லாம் என்று நடத்­து­நர் கூறி­னார்.

அதை­ய­டுத்து நாங்­கு­நே­ரி­யில் நிறுத்த வேண்­டும் என பேருந்து நிலை­யத்­தில் இருந்­த­வர்­களும் நிறுத்­தக்­கூ­டாது என பேருந்­துக்­குள் இருந்­த­வர்­களும் வாக்­கு­வா­தத்­தில் ஈடுப்­பட்­ட­னர்.

அந்­தச் செய்தி நாங்­கு­நே­ரியை எட்­டி­யதை அடுத்து பேருந்தை நாங்­கு­நே­ரி­யில் மக்­கள் மறித்­த­னர். காவல்­துறை விரைந்­தது.

அப்­போது சிலர் நடத்­து­நரை தங்கள் கைப்பேசியில் படம் எடுத்­த­னர்.

நாங்­கு­நே­ரி­யில் பேருந்து நிற்­காது எனக் கூறி­யது தவறு என்­பதை உணர்ந்த நடத்­து­நர் தரை­யில் உருண்டு அழ தொடங்­கி­னார். பிறகு சம­ர­சம் ஏற்­பட்டு பேருந்து புறப்­பட்­டுச் சென்­றது.