சாம்பாரில் விஷம் கலந்து மாமனார், மாமியார், சிறுவன் கொலை

சாம்பாரில் விஷம் கலந்து மாமனார், மாமியார், சிறுவன் கொலை

1 mins read

விருத்­தா­ச­லம்: கட­லூர் மாவட்­டம் விருத்­தா­ச­லம் அருகே உள்ள இளங்­கி­ய­னூர் என்­னும் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் சுப்­பி­ர­ம­ணி­யன்- கொளஞ்­சி­யம்­மாள் மகன் வேல்­மு­ரு­க­ன். இவருக்கு கீதா என்பவ ருடன் திரு­ம­ணம் ஆகி இரு பிள்­ளை­கள் உள்­ள­னர். வேல்­முரு­கன் வெளி­நாட்­டில் வேலை செய்து வந்த நிலை­யில் கடந்த 2021 டிசம்­பர் 29ஆம் தேதி கீதா முள்­ளங்கி சாம்­பார் சமைத்­தார். அதனை மாம­னார் சுப்­பி­ர­ம­ணி­யன், கொளஞ்­சி­யம்­மாள், பேரன் சர­வ­ணன் கிருஷ்­ணன், பக்­கத்து வீட்­டைச் சேர்ந்த நித்­தீஸ்­வ­ரன் என்ற சிறு­வன் என 4 பேரும் சாப்­பிட்­ட­னர்.

அப்­போது திடீ­ரென கொளஞ்­சி­யம்­மா­ளுக்கு வாந்தி, பேதி ஏற்­பட்­டது. தொடர்ந்து அவ­ரது கண­வர் சுப்­பி­ர­ம­ணி­ய­னுக்­கும் சிறு­வர்­க­ளுக்­கும் உடல்­ந­லக்­குறைவு ஏற்­பட்­டது. கூத்­தக்­குடி அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில் கொளஞ்­சி­யம்­மாள், சுப்­பி­ர­ம­ணி­யன், பக்­கத்து வீட்டு சிறு­வன் நித்­தீஸ்­வ­ரன் ஆகிய மூவர் உயி­ரி­ழந்­த­னர்.

இது குறித்து மங்­க­லம்­பேட்டை காவல்­து­றை­யி­னர் ஓராண்­டுக்­கும் மேல் நடத்­திய விசா­ர­ணை­யில், வேல்­மு­ரு­க­னின் மனைவி கீதா­விற்கு விருத்­தா­ச­லத்­தைச் சேர்ந்த ஹரி­ஹ­ரன், 43, என்­ப­வ­ரு­டன் கள்­ளத்­தொ­டர்பு இருந்­தது தெரி­ய­வந்­தது. இதனை வெளி­நாட்­டி­லி­ருந்த மகன் வேல்­மு­ரு­க­னி­டம் தாய் கொளஞ்­சி­யம்­மாள் கூறி­ய­தால் ஆத்­தி­ர­ம­டைந்த மரு­ம­கள் கீதா முள்­ளங்கி சாம்­பா­ரில் விஷம் வைத்து கொலை செய்­தது தெரி­ய­வந்­துள்­ளது. கீதா­வை­யும் ஹரி­ஹ­ர­னை­யும் காவல்­துறை கைது செய்து உள்­ளது.