கோயில் உண்டியலில் செலுத்திய தங்கச்சங்கிலியை திரும்பப் பெற்ற பெண்

கோயில் உண்டியலில் செலுத்திய தங்கச்சங்கிலியை திரும்பப் பெற்ற பெண்

1 mins read
29659d72-5091-40a0-a5e5-b4678f237e61
-

பழநி: கேரள மாநி­லம் ஆலப்­புழா மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் சங்­கீதா, 28. 2022 செப்­டம்­பர் 19ஆம் தேதி இவர் பழநி தண்­டா­யு­த­பாணி சுவாமி கோயி­லுக்கு சாமி தரி­ச­னம் செய்­யச் சென்­றார். பக்தி பர­வ­சத்­தில் உண்­டி­ய­லில் செலுத்த துளசி மாலையைக் கழற்றியபோது கழுத்திலிருந்த 1 3/4 பவுன் தங்­கச் சங்­கி­லி­யை­யும் சேர்த்து தவ­று­த­லாக உண்­டி­ய­லில் செலுத்­தி­விட்­டார்.

தவற்றை உணர்ந்த பின்­னர் நடந்­ததை விளக்கி கோயில் நிர்­வா­கத்­திற்கு அவர் கடி­தம் அனுப்­பி­னார். தங்­கள் குடும்­பம் ஏழ்மை நிலை­யில் உள்­ள­தென்­றும் அத­னால் உண்­டி­ய­லில் செலுத்­தப்­பட்ட தங்­கச் சங்­கி­லி­யைத்­தி­ரும்ப வழங்­கு­மா­றும் அக்­க­டி­தத்­தில் அவர் கேட்டுக்­கொண்­டார்.

அவர் சொன்­னது உண்­மை­தானா என்­பதை கண்­கா­ணிப்பு படக்­க­ருவி (சிசி­டிவி) மூலம் அதி­கா­ரி­கள் உறுதி செய்­த­னர். இருப்­பி­னும், விதிப்படி, உண்­டி­ய­லில் செலுத்­தப்­பட்ட பொருள் திருப்பி தரப்படுவதில்லை.

எனவே, பழநி கோயில் அறங்­கா­வ­லர் குழுத்­த­லை­வர் சந்­தி­ர­மோ­கன், ரூ.1.09 லட்­சம் மதிப்­புள்ள தங்­கச்சங்­கி­லியை அப்­பெண்­ணிற்கு வழங்­கி­னார். நேற்று முன்­தி­னம் சங்­கீதா தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் கோயில் அலு­வ­ல­கத்­திற்கு வந்து, கண்­ணீர்மல்க தங்­கச்­சங்­கி­லியை பெற்­றுச் சென்­றார்.