வெளிநாட்டவரிடம் 4 கோடி ரூபாய் போதைப்பொருள்

வெளிநாட்டவரிடம் 4 கோடி ரூபாய் போதைப்பொருள்

2 mins read

சென்னை: சென்னை மீனம்­பாக்­கம் அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து ஏரா­ள­மான கடத்­தல் பொருள்­கள் கொண்டு வரப்­படு­வ­தாக விமான நிலைய சுங்க இலாகா அதி­கா­ரி­க­ளுக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து சுங்க இலாகா அதி­கா­ரி­கள் விமா­னப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணித்­த­னர்.

அப்­போது மேற்கு ஆப்­பி­ரிக்­கா­வில் உள்ள ஐவரி கோஸ்­டில் இருந்து எத்­தி­யோப்­பியா வழி­யாக சென்னை வந்த விமா­னத்­தில் பய­ணம் செய்த பய­ணி­களை சுங்க இலாகா அதி­கா­ரி­கள் கண்­கா­ணித்­த­னர்.

அதில் ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இம்­மா­னு­வல், 32, என்­ப­வரை சந்­தே­கத்­தின் பேரில் பிடித்து விசா­ரித்­த­னர். சுற்­றுலா விசா­வில் சென்னை வந்­த­தாக அவர் கூறி­னார்.

மேலும் அவ­ரி­டம் சுங்க இலாகா அதி­கா­ரி­கள் விசா­ரித்­த­போது முன்­னுக்­குப் பின் முர­ணா­கப் பேசி­னார். இத­னால் அவ­ரது உடை­மை­களை அதி­கா­ரி­கள் சோதனை செய்­த­னர். அப்­போது அவ­ரி­டம் இருந்த கைப்­பி­டி­யு­டன் கூடிய சூட்­கேஸ் வழக்­கத்­துக்கு மாறாக சற்று அதிக எடை­யு­டன் இருந்­தது.

இத­னால் சந்­தே­கம் அடைந்த சுங்க இலாகா அதி­கா­ரி­கள், அந்த சூட்­கேசை பிரித்து சோதனை செய்­த­னர்.

சூட்­கே­சின் அடிப்­பா­கத்­தில் ரக­சிய அறை வைத்து அதில் விலை உயர்ந்த போதைப்­பொ­ருள் மறைத்து வைக்­கப்­பட்டு இருந்­ததை அவர்கள் கண்­டு­பி­டித்­த­னர்.

ரூ.4 கோடி மதிப்­புள்ள 1 கிலோ 999 கிராம் போதைப்­பொ­ருளை சுங்க இலாகா அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

அதனை கடத்தி வந்த இம்­மா­னு­வ­லைக் கைது செய்த சுங்க இலாகா அதி­கா­ரி­கள், அவர் யாருக்­காக அதனை கடத்தி வந்­தார்? இதன் பின்­ன­ணி­யில் உள்­ள­வர்­கள் யார்? அனைத்­து­ல­கப் போதைப் பொருள் கடத்­தல் கும்­ப­லுக்கு இதில் தொடர்பு உள்­ளதா? சென்­னை­யில் உள்ள போதைக் கடத்­தல் கும்­பல் யார்? என்ற கேள்­வி­க­ளுக்கு விடை­தேட தீவிர விசா­ர­ணை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அண்மைய நாள்களில் இந்த அளவுக்கு அதிக சந்தை மதிப்புள்ள போதைப்பொருள் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்டு இருப்பது இது முதல்முறை.

பெருமளவில் போதைப் பொருளைக் கடத்தும் கும்பல் சென்னையைப் பயன்படுத்து வதும் தெரியவந்தது.