ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாலை விபத்தில் பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாலை விபத்தில் பலி

2 mins read

தென்­காசி: பள்ளி வாக­னம் மீது கார் மோதிய விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐந்து பேர் பலி­யா­கி­னர்.

இந்­தச் சம்­ப­வம் சங்­க­ரன்­கோவில் அருகே நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

தென்­காசி மாவட்­டம் சங்­க­ரன்­கோ­வில் அருகே உள்ள பந்­தப்­புளி ரெட்­டி­ய­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் குரு­சாமி (45). இவர், தனது மனைவி வேலுத்­தாய் (35), மாமி­யார் உடை­யம்­மாள் (60), மகன் மனோஜ் குமார் (22) ஆகி­யோ­ரு­டன் இரு தினங்­க­ளுக்கு முன்­னர் திருச்­செந்­தூர் சென்­றி­ருந்­தார்.

அங்­குள்ள முரு­கன் கோவி­லில் சென்று சாமி தரி­ச­னம் செய்த அவர்­கள் புதன்­கி­ழமை ஊர் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், பன­வ­ட­லி­சத்­தி­ரம் என்ற பகு­தி­யில் அவர்­க­ளு­டைய கார் சென்று கொண்­டி­ருந்­த­போது, அது திடீ­ரென ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மாறாக ஓடி­ய­தா­கத் தெரி­கிறது. பின்­னர் எதிரே வந்த தனி­யார் பள்ளி வாக­னம் மீது பயங்­கர வேகத்­தில் நேருக்கு நேர் மோதி­யது.

இதில், அந்­தக் கார் அப்­ப­ளம் போல் நொறுங்­கி­ய­தா­க­வும் அதில் பய­ணம் செய்த ஐந்து பேரும் சம்­பவ இடத்­தி­லேயே உடல் நசுங்கி உயி­ரி­ழந்­த­தா­க­வும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்த விபத்­தில் தனி­யார் பள்ளி மாண­வர்­கள் நான்கு பேர் காய­ம­டைந்­த­னர்.

இதற்­கி­டையே சேலம் அருகே நிகழ்ந்த மற்­றொரு சாலை விபத்­தில் ஐந்து பேர் படு­கா­ய­ம­டைந்து உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது அவ்­வ­ழியே சென்று கொண்­டி­ருந்த செய்­தித்­துறை அமைச்­சர் சாமி­நா­தன், உட­ன­டி­யாக தனது காரை நிறுத்தி ஐந்து பேரை­யும் அரு­கி­லுள்ள அரசு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்ல ஏற்­பாடு செய்­தார்.

அதன் பிறகே அவர் அங்­கி­ருந்து புறப்­பட்­டுச் சென்­றார்.