குமரி: குடிமைப்பணிக்கான தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் தென்காசி பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ்.
அவருக்கு இத்தேர்வில் இந்திய அளவில் 621ஆவது இடம் கிடைத்துள்ளது. அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
தற்போது 'ஐஎஃப்எஸ்' அதிகாரியாகப் பணியாற்றி வரும் சுப்புராஜ், கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பங்கேற்றார்.
அவர் தேர்வை தமிழில் எழுதியிருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர், இந்திய அளவில் 621ஆவது இடத்தைப் பெற்று சாதித்திருப்பது தெரியவந்தது.
தமிழ் ஆர்வலர்கள் அவரது சாதனைக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து தமிழ்நாடு அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி என்பவர் 117ஆவது இடத்தையும் சுபாஷ் கார்த்திக் என்பவர் 118ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த மதிவதினி ராவணன் 447ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

