தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோடி: தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி

2 mins read
40431276-dd74-4566-9074-99e73443fd5e
-

புது­டெல்லி: தமிழ் மொழி என்­பது நம் மொழி, அது ஒவ்­வொரு இந்தி­ய­ரின் மொழி என பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

மூன்று நாடு­க­ளுக்கு மேற்­கொண்ட அதி­கா­ரத்­துவ பய­ணம் முடிந்து நாடு திரும்­பிய அவர் டெல்லி விமான நிலை­யத்­தில் பாஜக தொண்­டர்­களை சந்­தித்­துப் பேசி­ய­போது, உல­கின் தொன்­மை­யான மொழி தமிழ் மொழி­தான் என்­றார்.

"அந்த மொழி தந்த திருக்­குறளை பப்­புவா நியூ கினி நாட்­டில் டோக் பிசின் மொழி­யில் மொழி­பெ­யர்த்­துள்­ள­னர். அதை வெளி­யி­டும் வாய்ப்பு எனக்­குக் கிட்­டி­யது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்­தது," என்­றார் பிர­த­மர் மோடி.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குச் சென்­ற­போது, இந்­தி­யா­வில் நடை­பெ­ற­வுள்ள உல­கக் கிண்ண கிரிக்­கெட் போட்­டி­யைக் காண வரு­மாறு ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னீ­ஸுக்கு தாம் அழைப்பு விடுத்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் பல்­வேறு தளங்­களில் அணுக்­க­மா­கச் செயல்­ப­டு­வ­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

பப்­புவா நியூ கினி நாட்­டின் தலை­ந­க­ரில், இந்­திய - பசி­பிக் தீவு­கள் ஒத்­து­ழைப்பு அமைப்­பின் மாநாடு நடந்­தது.

தமது பய­ணத்­தின்­போது அம்­மா­நாட்­டில் பிர­த­மர் மோடி பங்­கேற்­றார். மேலும், இந்த மாநாட்­டின் போது­தான் அவர் மொழி­பெயர்க்­கப்­பட்ட திருக்­கு­றளை வெளி­யிட்­டார்.

உள்­நாட்­டில் மட்­டு­மல்­லா­மல் வெளி­நா­டு­க­ளி­லும் பல்­வேறு நிகழ்ச்­சி­களில் பேசும்­போது தமிழ் மொழி­யின் பெரு­மையை எடுத்­துக்­கூறி வரு­கி­றார் பிர­த­மர் மோடி.

அவ்­வப்­போது தமது சமூக ஊட­கப் பதி­வு­க­ளி­லும் அவர் திருக்­கு­ற­ளின் மேன்­மையை எடுத்­துக் கூறு­கி­றார்.

இப்­போ­தெல்­லாம் உலக நாடு­கள் பல­வும் இந்­தியா தற்­போது என்ன சிந்­திக்­கிறது என்­பதை அறிய ஆர்­வ­மு­டன் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், கொரோனா நெருக்கடிக் காலத்தின்போது தடுப்­பூ­சியை உலக நாடு­க­ளுக்கு அளித்­தது பற்றி வெளி­நாட்­டில் கேள்வி எழுப்­பப்­ப­டும்­போது, இந்­தியா புத்­த­ரின் மண் என்­றும் இந்­தியா எதி­ரி­க­ளை­யும் அக்­க­றை­யு­டன் நடத்­தும் என்­றும் தாம் பதி­ல­ளித்­ததா­கத் தெரி­வித்­தார்.