தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தில் பாலாஜி: வரி ஏய்ப்பு செய்யவில்லை

2 mins read
0a56246f-0f37-4e8f-82bb-ed05160477b6
-

நாற்பது இடங்களில் வருமான வரித்துறை சோதனை; அதிகாரிகள் தாக்கப்பட்டனர்

சென்னை: தமி­ழக மின்­சா­ரத்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி­யு­டன் தொடர்­பு­டைய நாற்­பது இடங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் நேற்று அதிரடிச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது அமைச்­ச­ரின் ஆத­ர­வா­ளர்­கள் அதி­கா­ரி­களை தாக்க முற்­பட்­ட­தாக சில இடங்­களில் பதற்­றம் நில­வி­யது.

இந்­நி­லை­யில், தாம் வரி ஏய்ப்பு ஏதும் செய்­ய­வில்லை என்­றும் ஆதா­ரங்­கள் இருந்­தால் தம் மீது நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்­றும் அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக முதல்­வர் தமி­ழ­கத்­துக்­கான தொழில் முத­லீ­டு­களை ஈர்க்க வெளி­நா­டு­க­ளுக்­குச் சுற்றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள நிலை­யில், தமி­ழக அமைச்­சரை விசாரணை வளை­யத்­துக்­குள் கொண்டு வர வரு­மா­ன­வ­ரித்­துறை மேற்­கொண்ட நட­வ­டிக்கை அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

நேற்று காலை அமைச்­ச­ரு­டன் தொடர்­பு­டைய வெவ்வேறு இடங்­களில் அதி­கா­ரி­கள் ஒரே சம­யத்­தில் சோதனை மேற்­கொண்­ட­னர். இது­கு­றித்து தக­வ­ல­றிந்த திமு­க­வி­னர் அந்த இடங்­களில் குவி­யத் தொடங்­கி­னர்.

சில இடங்­களில் அதி­கா­ரி­கள் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­க­ளு­டைய வாக­னங்­கள் தாக்­கப்­பட்­ட­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

கரூர் மாவட்­டத்­தில் உள்ள அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யின் வீட்­டின் முன்­பாக நிறுத்­தப்­பட்­டி­ருந்த வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­க­ளின் வாக­னங்­களை திமுக தொண்­டர்­கள் அடித்து உடைத்­த­தால் அங்கு பர­ப­ரப்பு ஏற்­பட்­ட­தாக ஊட­கச் செய்தி குறிப்­பிட்­டது.

இதை­ய­டுத்து கரூர் மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் அலு­வ­ல­கத்­தில் அதி­கா­ரி­கள் தஞ்­சம் புகுந்­த­னர். இத­னால் சோதனை நட­வ­டிக்கை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் செந்­தில் பாலாஜி, தமது வீட்­டில் சோதனை நடக்­க­வில்லை என்­றும் தமது சகோ­த­ர­ரின் வீட்­டுக்­குத்­தான் அதி­கா­ரி­கள் சென்­ற­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"இது­போன்ற நட­வ­டிக்­கை­களை எதிர்­கொள்­வது எங்­க­ளுக்­குப் புதி­தல்ல. வரு­மான வரித்­துறை­யி­ன­ரின் சோத­னையை நேர்மை­யாக எதிர்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக சோதனை நடக்­கும் இடங்­களில் திமுகவினர் யாரும் இருக்­கக் கூடாது என கட்­சி­யி­ன­ரி­டம் தொலை­பே­சி மூலம் அறி­வு­றுத்தி உள்­ளேன்," என்­றார் அமைச்­சர் செந்­தில் பாலாஜி.

வரு­மான வரித்­துறை சோதனை நட­வ­டிக்­கை­யின் மூலம் பாஜக தனது தரம் தாழ்ந்த அர­சி­யலை வெளிப்­ப­டுத்தி உள்­ள­தாக திமுக மூத்த பிர­மு­கர் ஆர்.எஸ்.பாரதி சாடி­யுள்­ளார்.