56 ஆயிரம் கைப்பேசி இணைப்புகள் முடக்கம்

56 ஆயிரம் கைப்பேசி இணைப்புகள் முடக்கம்

1 mins read

சென்னை: போலி ஆவ­ணங்­களை அளித்து கைப்­பேசி இணைப்­பு­களைப் பெற்­றது தொடர்­பில் தமி­ழக அர­சும் காவல்­து­றை­யும் கடும் நட­வடிக்கை­களை மேற்­கொண்டு வரு­கின்றன. இந்­நி­லை­யில் மாநி­லம் முழு­வ­தும் 56 ஆயி­ரம் சிம் அட்டை­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன.

இவை அனைத்­துமே போலி ஆவ­ணங்­கள் மூலம் வாங்­கப்­பட்­டுள்­ள­தாக காவல்­து­றை­யின் இணைய குற்­றப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நாடு முழு­வ­தும் இணைய வழி குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் முறை­கே­டாக வாங்­கப்­பட்­டுள்ள சிம் அட்­டை­க­ளின் துணை­யோடு பல்­வேறு மோச­டி­கள் நிகழ்­வ­தா­க­வும் மத்­திய உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து கடந்த மூன்று மாதங்­க­ளுக்­கும் மேலாக தீவிர விசா­ரணை மேற்­கொண்ட தமிழக காவல்­து­றை­யி­னர் பல்­வேறு முக்­கியத் தக­வல்­களை சேக­ரித்­துள்­ள­னர். அவற்­றின் அடிப்­ப­டை­யில் கைப்­பேசி நிறு­வனங்­க­ளுக்கு சில உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்­துள்­ள­னர்.

முதற்­கட்­ட­மாக, போலி ஆவ­ணங்­கள் மூலம் பெறப்­பட்ட 55,982 சிம் அட்­டை­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. முறை­கேட்­டில் ஈடு­பட்ட சிம் அட்டை விற்­ப­னை­யா­ளர்­கள் மீது வழக்­குப் பதிவாகி உள்­ளது. இது தொடர்­பான அறிக்கை மத்­திய உள்­துறை அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­க­வும் அந்த அமைச்­சின் உத்­த­ர­வின் பேரில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

"விழுப்­பு­ரம், கட­லூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்­சா­வூர், நெல்லை ஆகிய மாவட்­டங்­களில் சிம் அட்­டை­கள் முறை­கேடு தொடர்­பாக 12 வழக்­கு­க­ளைப் பதிவு செய்­துள்­ளோம். ஐந்து பேரைக் கைது செய்து நீதி­மன்ற காவ­லில் சிறை­யில் அடைத்­துள்­ளோம். தமி­ழ­கம் முழு­வ­தும் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது," என காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.