சோழர்கால வரலாற்றுடன் கூடிய ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு

சோழர்கால வரலாற்றுடன் கூடிய ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு

1 mins read

தூத்­துக்­குடி: திருச்­செந்­தூர் அருகே உள்ள ஆறு­மு­க­னேரி பகு­தி­யில் சோழர்­க­ளின் வர­லாற்றை விவ­ரிக்­கும் ஓலைச் சுவடி­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுவ­டி­யி­யல் பேரா­சி­ரி­யர் சு.தாம­ரைப்­பாண்­டி­யன் தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் திருச்­செந்­தூர் பகு­தி­யில் தாம் கள ஆய்வு மேற்­கொண்­ட­தா­க­வும் அப்­போது ஆறு­மு­க­னே­ரி­யில் ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யர் த.தவ­சி­முத்து மாற­னி­டம் இருந்து 14 அரிய ஓலைச் சுவ­டி­க­ளைப் பெற்­ற­தா­க­வும் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

அந்த ஓலைச் சுவ­டி­களில் சோழர்­கள் வர­லாறு தொடர்­பு­டைய தக­வல்­கள் காணப்படுவதாக­வும் அவை மிக­வும் அரி­தான ஓலைச்­சு­வ­டி­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"கடந்த கிபி.11 முதல் 18ஆம் நூற்­றாண்டு வரை­யி­லான காலக்­கட்­டத்­து­டன் தொடர்­பு­டைய விவ­ரங்­கள் இந்த ஓலைச்­சு­வ­டி­களில் இடம்­பெற்­றுள்­ளன.

"அவற்­றுள் பல இது­வரை தெரிந்­தி­ராத தக­வல்­கள் ஆகும். ஓலைச்­சு­வ­டி­களில் மேலும் பல்­வேறு வர­லாற்­றுத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன," என்று பேரா­சி­ரி­யர் தாம­ரைப் பாண்­டி­யன் கூறி­உள்­ளார்.

தமி­ழ­கம் முழு­வ­தும் கோவில்­கள், மொழி ஆர்­வ­லர்­கள் வசம் உள்ள அரிய வகை ஓலைச்­சு­வடி­களை அடை­யா­ளம் கண்டு, அவற்­றைத் தொகுத்து வரு­கி­றார் தாம­ரைப்­பாண்­டி­யன்.

இதன் மூலம் பல்வேறு அரிய ஓலைச்சுவடிகள் மீட்கப்பட்டு, தொகுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.