சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வருவதால் பள்ளிகளைத் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளின் திறப்பு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கோடைக்கால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் அதை ஏற்று, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், "கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முதல்வரின் ஆணைக்கிணங்க மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகளைத் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

