மூன்று மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து

2 mins read
0955746c-de03-43d4-b089-8454a4b4e6b2
-

சென்னை: சென்னையில் செயல் படும் பிரபல ஸ்டான்லி மருத்துவ மனை உட்பட தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள், புதுவையில் ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இள நிலை மருத்துவக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஸ்டான்லியைத் தவிர திருச்சி கி.ஆ.பெ. விசுவ நாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீ காரமும் ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனமும் அங்கீகாரத்தை இழக்கிறது.

இதனை எதிர்த்து மூன்று மருத்துவக் கல்லூரிகளும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் பொது­வா­கப் பின்­பற்­றப்­படும் விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக மூன்று கல்­லூ­ரி­களும் தண்­டிக்­கப்­பட்­டுள்­ளன. ஆதார் அடிப்­ப­டை­யி­லான கைரேகை வரு­கைப் பதி­வேட்­டில் விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­யா­தது, கல்­லூ­ரி­களில் நிறு­வப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்­பு படச்சாதனங்கள் சரி­யாகச் செயல்­ப­டா­தது ஆகி­யவை அங்­கீ­கா­ரம் ரத்து செய்­யப்­ப­டு ­வ­தற்­கான கார­ணங் களாகத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளன. குறிப்­பாக ஆசி­ரி­யர்­க­ளின் விடுப்பு முறை­யாகப் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. இந்த ­நி­லை­யில் மருத்­து­வ­ரும் பாமக தலை­வ­ரு­மான அன்­பு­மணி ராம­தாஸ், தேசிய மருத்­துவ ஆணை­யத்­தின் மூன்று கல்­லூ­ரி­ க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை கடு­மை­யா­னது என்று டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன், "படச்சாதனம் செயல்பட வில்லை என்பதால் மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதா, சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு மத்திய அமைப்புகள் தேடுகின்றன" என்று சாடினார். மூன்று மருத்துவக் கல்லூரிகளும் பழமை வாய்ந்தவை என்றார். அவர். மூன்று மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 500 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.