சமூக ஊடகங்களில் பரவும் குழந்தைகள் திருமணப் படம்

சமூக ஊடகங்களில் பரவும் குழந்தைகள் திருமணப் படம்

1 mins read

சிதம்­ப­ரம்: சிதம்­ப­ரத்­தில் உள்ள நட­ரா­ஜர் கோயில் தீட்­சி­தர் களின் குழந்­தை­க­ளுக்குத் திரு ­ம­ணம் செய்­யப்­ப­டு­வ­தாகப் புகார் வந்­த­தைத் தொடர்ந்து அதி காரி­கள் நட­வ­டிக்கை எடுத்­துள்ள நிலை­யில் தீட்­சி­தர் குழந்­தை­கள் திரு­ம­ணப் படம் சமூக ஊட­கங்­களில் பரவி புதிய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சில நாட்­க­ளுக்கு முன்பு தேசிய குழந்­தை­கள் பாது­காப்பு ஆணைய உறுப்­பி­னர் ஆனந்த், சிதம்­ப­ரம் வந்து இது தொடர்­பாக விசா­ரணை நடத்­தி­னார்.

முத­லில் நட­ரா­ஜர் கோயி­லுக்குச் சென்று தீட்­சி­தர்­க­ளி­டம் குழந்­தை­கள் திரு­ம­ணம் பற்றி விசா­ரித்தார். பின்­னர் அனைத்து மக­ளிர் காவல் நிலை­யம் சென்று இந்த வழக்கு தொடர்­பான அறிக்­கையைக் கேட்­ட­றிந்­தார். மேலும் குழந்­தை­கள் திரு­ம­ணம் நடை­பெற்­ற­தா­கக் கூறப்­படும் வீடு­க­ளுக்கும் அவர் சென்று விசா­ரணை மேற்­கொண்­டார்.

இந்த நிலை­யில் தீட்­சி­தர் குழந்­தை­க­ளுக்­குத் திரு­ம­ணம் நடை­பெற்ற புகைப்­ப­டம் சமூக ஊட­கங்­களில் பல­ரின் கவ­னத்தை ஈர்த்து புதிய சர்ச்­சை­யைக் கிளப்­பி­யி­ருக்­கிறது.