சுற்றுக்காவலுக்கு ஆட்டோ

1 mins read
f3fa39b1-06d6-4ff0-a35e-dadd6d8c5ae0
-

கோவை: இந்­தியா முழு­வ­தும் ஜீப், கார், மோட்­டர் பைக் ஆகிய வாக­னங்­களில் காவல்­துறை யினர் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் நாட்­டி­லேயே முதல் முறை­யாக கோவை மாந­க­ரில் சுற்­றுக்­கா­வல் பணி­யில் இரண்டு ஆட்­டோக்­கள் சேர்க்­கப்­பட்டு உள்­ளன.

சிவப்பு நிறத்­து­டன்­கூ­டிய இரண்டு ஆட்­டோக்­களும் மின்­சக்­தி­யில் இயங்­கக் கூடி­யவை. இவற்­றில் எச்­ச­ரிக்கை ஒலி பெருக்கி, ஒளி­ரும் சிவப்பு, நீல விளக்­கு­கள் பொருத்­தப்­பட்டு உள்­ளன.

மேலும் ஆட்­டோ­வின் நான்கு புற­மும் போக்­கு­வ­ரத்து, காவல்­து­றை­யின் தொலை­பேசி, அவ­சர உதவி எண்­கள் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளன.

இரு ஆட்­டோக்­களும் நேற்று முதல் பணி­யைத் தொடங்­கின.