'180 கி.மீ. வேக 'வந்தே பாரத்' ரயில் சோதனை

'180 கி.மீ. வேக 'வந்தே பாரத்' ரயில் சோதனை

1 mins read

சென்னை: வந்தே பாரத் ரயில் களில் மேம்­பட்ட வச­தி­களை எதிர்­பார்க்­க­லாம் என்று சென்னை பெரம்­பூர் ரயில் பெட்­டித் தொழிற் சாலை­யான ஐசி­எஃப் அறி­வித்து உள்­ளது.

ஐசி­எஃப் பொது­மே­லா­ளர் பி. கோபி­நாத் மால்யா வெள்­ளிக் கிழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது பெரம்­பூர் ரயில் பெட்­டித் தொழிற்­சா­லை­யில் 115 வந்தே பாரத் ரயில்­கள் தயா­ரிக்க ஆணை கிடைத்­துள்­ள­தா­க­வும் இது­வரை 21 வந்தே பாரத் ரயில்கள் தயா­ரிக்­கப்­பட்டு இந்­திய ரயில்­வே­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

இங்கு 16 பெட்­டி­கள் மற்­றும் எட்டு பெட்­டி­களைக் கொண்ட வந்தே பாரத் ரயில்­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இவை 180 கி.மீ. வேகத்­தில் இயக்கச் சோதனை செய்­யப்­பட்டு, 160 கி.மீட்­டர் வேகத்­தில் இயக்கப்படுகிறது.

தற்­போது, டெல்லி-ஆக்ரா இடையே அதி­க­பட்­ச­மாக மணிக்கு 160 கி.மீ. வேகத்­தில் வந்தே பாரத் ரயில் இயக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாண்டு இறு­திக் குள் படுக்கை வச­தி­கொண்ட வந்தே பாரத் ரயில் தயா­ரிக்­கப்­படும் என்­று அவர் தெரி­வித்­தார்.

அண்­மை­யில் டெல்லி-டேரா­டூன் வந்தே பாரத் ரயிலைப் பிர ­த­மர் மோடி தொடங்கி வைத்­தார்.