தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்குவாதம், மோதல்: திமுகவினர், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்கு

2 mins read

நீல­கிரி: அமைச்­சர் செந்­தில் பாலா­ஜியை மையப்­ப­டுத்தி வரு­மான வரித்­து­றை­யி­னர் மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்கை இரண்­டா­வது நாளாக நேற்­றும் நீடித்­தது.

நேற்று முன்­தி­னம் அமைச்­ச­ரு­டன் தொடர்­பு­டைய நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட இடங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தச் சென்­ற­போது இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்டு, மோத­லில் முடிந்­தது.

இது தொடர்­பாக அமைச்­சர், வரு­மான வரித்­துறை என இரு­தரப்­பைச் சேர்ந்­த­வர்­கள் மீதும் கரூர் மாவட்ட காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது. தாக்­கு­தலுக்கு ஆளான நான்கு அதி­காரி­கள் தீவிர சிகிச்சை பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக ஒரு தக­வல் தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே நேற்று காலை முதல் கரூர், கோவை, சென்னை ஆகிய மாவட்­டங்­களில் உள்ள அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யு­டன் தொடர்­பு­டைய இடங்­களில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

சோதனை நட­வ­டிக்கை முழுமை­ய­டைந்த பின்­னர், கைப்­பற்­றப்­பட்ட ஆவ­ணங்­கள் உள்­ளிட்டவை குறித்து விரி­வான அறிக்கை வெளி­யி­டப்­படும் என வரு­மா­ன­வ­ரித்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

தமி­ழக மின்­சா­ரத்­துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்பு வகிக்கும் செந்­தில் பாலாஜி வரு­மா­னத்துக்கு அதி­க­மாகச் சொத்து குவித்­த­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்டி வந்தன.

மேலும், மின்­சா­ரத் துறை­யி­லும் ஆயத்­தீர்­வைத் துறை­யி­லும் பல்வேறு முறை­கே­டு­கள் நடந்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், அமைச்­ச­ரின் சகோ­த­ரர், உற­வி­னர்­கள், நண்பர்­க­ளின் வீடு­களில் வரு­மான வரித்­து­றை­யினர் நேற்று முன்­தி­னம் ஒரே சம­யத்­தில் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது சில இடங்­களில் அதி­கா­ரி­க­ளின் கார் கண்­ணா­டி­கள் அடித்து நொறுக்­கப்­பட்­டன. சில அதி­கா­ரி­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன.

இரு தரப்­பி­ன­ரும் இந்­தச் சம்பவம் தொடர்­பாக காவல்­து­றை­யில் புகார் அளித்­தனர். அவற்­றின் பேரில் முதற்கட்டமாக திமுக­வி­னர் ஐம்பது பேர் மீது கரூ­ர் காவல்துறை வழக்­குப்­ ப­திவு செய்துள்ளது.