3 மணி நேர கனமழை; 5 மணி நேரம் நீடித்த காட்டாற்று வெள்ளம்

3 மணி நேர கனமழை; 5 மணி நேரம் நீடித்த காட்டாற்று வெள்ளம்

1 mins read
536acb32-0111-49ba-a0a3-4e48b493bc91
-

ஈரோடு: ஐந்து மணி நேரம் நீடித்த காட்­டாற்று வெள்­ளத்­தால் (படம்) ஈரோடு மாவட்­டத்­தில் பல கிரா­மங்­கள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இரு தினங்­க­ளுக்கு முன்பு வரை அனல் காற்று வீசிய நிலை­யில், நேற்று முன்­தி­னம் ஈரோடு மாவட்­டம் கடம்­பூர் மலைப்­ப­கு­தி­யில் மூன்று மணி நேரம் இடி, மின்­ன­லு­டன் பலத்த மழை பெய்­தது.

கோபி­செட்­டிப்­பா­ளை­யம், பெருந்­துறை, தாள­வாடி, கொடு­முடி, மொடக்­கு­றிச்சி, கவுந்­தப்­பாடி, சென்­னி­மலை, குண்­டேரி பள்­ளம் அணைப் பகுதி, பர்­கூர், கடம்­பூர் மலைப்­ப­கு­தி­க­ளி­லும் கன­மழை பெய்­த­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதன் கார­ண­மாக பள்­ளத்­தாக்­கு­களில் காட்­டாற்று வெள்­ளம் கரை புரண்டு ஓடி­யது. சக்­க­ரப்­பள்­ளம் என்ற பகு­தி­யில் காட்­டாற்று வெள்­ளம் தரைப்­பா­லத்தை மூழ்­க­டித்­தது. இதன் கார­ண­மாக குரும்­பூர் உள்­பட பல்­வேறு மலை கிரா­மங்­கள் துண்­டிக்­கப்­பட்­டன. வாக­னப் போக்­கு­வ­ரத்து முடங்­கி­யது.

ஏறத்­தாழ ஐந்து மணி நேரம் காட்­டாற்று வெள்­ளம் கரை புரண்டு ஓடி­யது. பின்­னர் தண்­ணீர் குறை­யத் தொடங்­கி­ய­தால் துண்­டிக்­கப்­பட்ட கிரா­மங்­க­ளைச் சேர்ந்த பொது­மக்­கள் நிம்­ம­தி­ அடைந்­த­னர்.

வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததும், போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. ஈரோடு மாநகரிலும் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணி நேரத்துக்குக் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் சில நாள்களுக்குக் கோடை மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.