செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d35f782e-d4b1-42b0-b60b-63922bc31db5
-

குன்னூரில் பழக் கண்காட்சி

குன்னூரில் 63வது பழக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதைக் காண நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். படம்: தமிழக ஊடகம்

சிறப்பான செயல்பாடு: தமிழக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு விருது

விருதுநகர்: இந்திய அளவில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை தமிழகக் குடிநீர் வடிகால் வாரியம் பெற்றுள்ளது.

திமுக ஆட்சியில் தான் குடிநீர் வடிகால் வாரியம் இச்சாதனையைப் புரிந்துள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது என்றார். "ஆனால் கடந்த இரண்டு ஆண்டு களில் அந்த வாரியத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன," என்றார் அமைச்சர் நேரு.

கிருத்திகா உதயநிதி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை: அமைச்­சர் உத­ய­நி­தி­யின் மனைவி கிருத்­திகா உத­ய­நி­தி­யின் சொத்­து­களை மத்­திய அம­லாக்­கத்­துறை திடீ­ரென முடக்­கி­யுள்­ளது. இத­னால் திமுக வட்­டா­ரங்­களில் பர­ப­ரப்பு நில­வு­கிறது. மொத்­தம் ரூ.36.3 கோடி மதிப்­புள்ள அசையா சொத்­து­கள் முடக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது. அண்­மை­யில் உத­ய­நிதி அறக்­கட்­டளை, கல்­லல் குழு­மம் ஆகி­ய­வற்­று­டன் தொடர்­பு­டைய இடங்­களில் மத்­திய அம­லாக்­கத்­து­றை­யி­னர் சோதனை மேற்­கொண்­ட­னர். அந்­ந­ட­வ­டிக்­கையை அடுத்து, கிருத்­திகா உத­ய­நி­தி­யின் அசையா சொத்­து­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், அவ­ரது வங்­கிக் கணக்­கில் உள்ள 36.3 லட்சம் ரூபா­யை­யும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பேருந்து சேவையை அதிகரிக்க வலியுறுத்தி பேருந்து சிறைபிடிப்பு

நீலகிரி: அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டதால் நீலகிரியில் பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள காந்தல் பகுதிக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி நீண்ட காலமாக மனுக்கள் அளிக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். எனினும் 20,000 பேர் வசிக்கும் தங்கள் பகுதிக்கு ஆறு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை இரண்டாகக் குறைந்துள் ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரி களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.