மதுக்கடை கொள்ளையர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு

மதுக்கடை கொள்ளையர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு

1 mins read

நீல­கிரி: மதுக்­க­டை­யில் கொள்ளை­ய­டிக்க முயன்­ற­வர்­கள் மீது காவல்­துறை துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யது நீல­கி­ரி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

கொள்­ளை­யர்­க­ளைப் பிடிக்க முயன்­ற­போது, அவர்­கள் மதுப்­புட்டி­களை வீசித் தாக்­கு­தல் நடத்­தி­ய­தால், காவல்­து­றை­யி­னர் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யாக துப்­பாக்கி­யால் சுட்­டது தெரி­ய­வந்­துள்­ளது.

நீல­கிரி மாவட்­டத்­தில் உள்ள பந்­த­லூர் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் அதி­கா­லை­யில் காவல்­துறை­யி­னர் வழக்­க­மான சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்தனர்.

அப்­போது அங்­குள்ள மதுக்­கடை திறந்­தி­ருந்­தது. மேலும் விளக்­கு­களும் எரிந்­த­தால் சந்­தே­கம் வலுக்­கவே, விசா­ரணை நடத்த முடிவு செய்­த­னர்.

கடைக்கு அருகே சென்­ற­போது இரு ஆட­வர்­கள் நின்­றி­ருப்­ப­தும் மதுப்­புட்­டி­களை ஒரு சாக்­குப் பைக்­குள் எடுத்து வைப்­ப­தும் தெரிந்­தது. மேலும், கடைக்குள் இருந்த பணப்­பெட்டி உடைந்­தி­ருப்­ப­தைக் கண்­ட­தும் அங்கு கொள்ளை முயற்சி நடப்­பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்துக் கடைக்­குள் இருந்­த­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. ஆனால் அவ்விரு ஆட­வர்­களும் சர­ண­டைய மறுத்து, காவல்­து­றை­யி­னர் மீது மதுப்­புட்­டி­களை வீசி­யெ­றிந்து தாக்­கு­தல் நடத்­தி­னர். அதை­யும் மீறி காவ­லர்­கள் நெருங்கி வந்­த­போது கத்­தி­யால் தாக்­கி­னர்.

காவ­லர்­கள் இரு­வர் படு­கா­யம் அடைந்­த­தை­ய­டுத்து, கொள்­ளை­யர்­கள் மீது தற்­காப்­புக்­காக துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது.

இதில் ஒரு கொள்­ளை­யன் காலில் குண்டு பாய்ந்­த­தில் அவன் அங்­கேயே சுருண்டு விழுந்­தான். மற்­றொ­ரு­வன் தப்­பி­யோ­டி­னான். விசா­ர­ணை­யில் இரு­வ­ரும் நீல­கி­ரியைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது தெரி­ய­வந்­தது. தப்­பி­யோ­டிய கொள்­ளை­ய­னுக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.