தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வைகோ: மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க முனைவது உள்நோக்கம் கொண்டது

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் சிறப்­பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்­லூ­ரி­களை முடக்க மத்­திய பாஜக அரசு முனைந்­தி­ருப்­பது உள்­நோக்­கம் கொண்­டது என்று மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ விமர்­சித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்டுள்ள அறிக்­கை­யில், தமி­ழ­கத்­தின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்­து­வக்­கல்­லூரி உள்­ளிட்ட மூன்று மருத்­து­வக்­கல்­லூ­ரி­க­ளின் அங்கீ­கா­ரத்தை தேசிய மருத்­துவ ஆணை­யம் ரத்து செய்ய முடிவு செய்­தி­ருப்­பது அதிர்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

மத்­திய பாஜக அர­சின் இந்­நட­வ­டிக்­கை­யால் இந்த மூன்று கல்­லூ­ரி­களில் நடப்பு ஆண்டில் மருத்­துக்­கல்­விக்­கான 500 இடங்­க­ளுக்கு மாண­வர் சேர்க்கை தடை­படும் நிலைமை உரு­வாகி இருப்­ப­தாக வைகோ கவலை தெரி­வித்­துள்­ளார்.

நட­வ­டிக்­கைக்கு ஆளா­கியுள்ள மூன்று கல்­லூ­ரி­க­ளி­லும் பேராசிரி­யர், மாண­வர்­க­ளின் ஆதார் அட்­டை­யு­டன் இணைக்­கப்­பட்ட பயோ - மெட்­ரிக் வரு­கைப் பதிவு, கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள் ஆகி­யவை முறை­யாக செயல்­ப­ட­வில்லை என தேசிய மருத்துவ ஆணை­யம் சுட்­டிக்­காட்டி உள்ளது.

இந்த ஏற்­பா­டு­களை முறை­யாகப் பரா­ம­ரிக்­கா­த­தும் அக்­கல்­லூ­ரி­கள் மீதான நட­வ­டிக்­கைக்­குக் கார­ணம் என அந்த ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

"மேற்­கண்ட மருத்­து­வக்­கல்லூரி நிர்­வா­கங்­கள் அளித்த விளக்­கத்தை ஏற்க மறுத்து, அங்­கீ­கா­ரத்தை ரத்து செய்­தது வன்­மை­யான கண்­ட­னத்­துக்கு உரி­யது.

"மிகச் சதா­ர­ண­மான கார­ணங்­க­ளைக் கூறி தமி­ழ­கத்­தில் சிறப்­பாக இயங்கி வரும் மூன்று மருத்­து­வக் கல்­லூ­ரி­களை முடக்க மத்­திய பாஜக அரசு முனைந்­தி­ருப்­பது உள்­நோக்­கம் கொண்­ட­தா­கும்.

"இதனை நியா­யப்­ப­டுத்­தவே முடி­யாது," என வைகோ தமது அறிக்­கை­யில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.