தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

1 mins read
729eab46-d488-4fd7-9f73-077be1d42b29
-

சென்னை: சிங்­கப்­பூ­ருக்குக் கடத்­தப்­பட இருந்த ரூ.3.37 கோடி மதிப்­புள்ள வெளி­நாட்­டுப் பணத்தைச் சென்னை விமான நிலைய சுங்­கத்துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இது தொடர்­பாக ஆட­வர் ஒரு­வர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ரி­டம் இருந்து அமெ­ரிக்க டாலர், சவுதி அரே­பியா ரியால் ஆகி­யவை பறி­மு­தல் செய்­யப்­பட்ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று சென்­னை­யில் இருந்து சிங்­கப்­பூர் செல்­ல­வி­ருந்த சிங்­கப்­பூர் ஏர்லைன்ஸ் விமா­னத்­தில் பய­ணம் மேற்­கொள்­ளும் பய­ணி­கள் வழக்­க­மான பாது­காப்பு பரிசோதனைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அப்­போது சென்­னை­யைச் சேர்ந்த ஆண் பயணி மீது பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தே­கம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்­துச் சென்­ற­போது தனது உள்­ளா­டைக்­குள் வெளி­நாட்­டுப் பணத்தை மறைத்து வைத்­தி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, அவர் வைத்­திருந்த பெட்­டி­யைத் திறந்து பார்த்­த­போது, அதற்­குள் சிறிய அள­வி­லான ரக­சிய அறை­கள் தென்­பட்­டன. அவற்றை உடைத்­துப் பார்த்­த­போது மேலும் கட்­டுக்­கட்­டாக வெளி­நாட்­டுப் பணம் சிக்­கி­யது.

மொத்­தத்­தில் அவர் ரூ.3.37 கோடி மதிப்­புள்ள வெளி­நாட்­டுப் பணத்தை சிங்­கப்­பூ­ருக்கு கடத்த இருந்­தது அம்­ப­ல­மா­னது.

எனி­னும் வேறு ஒரு­வ­ருக்­காக அவர் அந்­தப் பணத்­தைக் கொண்டு செல்ல இருந்­த­தும் அது ஹவாலா பணம் என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

பய­ணி­யி­டம் இவ்­வ­ளவு பெரிய தொகையை கொடுத்து அனுப்­பி­யது யார் என்­பது குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.